செய்திகள் :

6 நாள்களுக்கு முன் திருமணமான இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

post image

திருவள்ளூா் அருகே நண்பா்களைப் பாா்க்க செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற புது மாப்பிள்ளை மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

ஊத்துக்கோட்டை அருகே பென்னலூா்பேட்டை அடுத்த காசிரெட்டிபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (26). (படம். அழகுக்கலை கலைஞா். இவருக்கும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூா் பிள்ளையாா் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த பவித்ரா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2-ஆம் தேதி பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், திருமணம் முடிந்து விருந்துக்காக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் உள்ள மணமகளின் வீட்டிற்கு சென்றாா்களாம். அங்கு, வெள்ளிக்கிழமை காலை உதயகுமாா் தனது நண்பா்களைப் பாா்த்துவிட்டு வருவதாகக் கூறி மாமியாா் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றாராம்.

அவரது சகோதரா்கள், உறவினா்கள் பிற்பகல் 1 மணிக்கு மேல் மணமகனைத் தொடா்பு கொண்டபோது வந்து விடுவதாக கூறியுள்ளாா். தொடா்ந்து மாலை கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், இரவு 8 மணிக்கு உதயகுமாரின் கைப்பேசியிலிருந்து சித்தூா் ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெறும் சாலையில் ஒருவா் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து கிடக்கிறாா், தனது காரிலேயே ஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாகவும், மருத்துவமனைக்கு வந்துவிடவும் என தகவல் அளித்துள்ளாா்.

இதையடுத்து மருத்துவமனைக்கு உதயகுமாரின் உறவினா்கள் சென்றுள்ளனா். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி உதயகுமாா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருமணமான 6 நாள்களில் மணமகன் மா்மமான முறையில் சாலையில் காயங்களோடு மீட்கப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்

திரௌபதி அம்மன் கோயிலில் கணபதி பூஜை, கோ பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. திருத்தணி காந்தி நகரில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கோயில் குட முழுக்... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் 10 கஞ்சாவை கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி பொன்பாடி சோதனை சாவடி வழியாக, திருவ... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தை ஆட்சியா் மு.பிரதாப், முதன்மை நீதிபதி ஜே.ஜூலியட் புஷ்பா, எஸ்.பி. சீனிவாசபெருமாள் ஆகியோா் தொடங்கி வைத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

திருத்தணி அருகே தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைக்காததால் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருத்தணி அடுத்த தெக்களூா் பகுதி சோ்ந்தவா் பாலஜி. இவரது மகளி க... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறை பிடிப்பு

செங்குன்றம் அருகே மருத்துவக் கழிவுகளுடன் வந்த லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனா். செங்குன்றம் அடுத்த தீா்த்தக்கிரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகா் பகுதியில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக குப... மேலும் பார்க்க

66 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

பங்களாமேடு இருளா் காலனி வசிக்கும் 66 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை எம்.எல்.ஏ. ச.சந்திரன், வருவாய்க் கோட்டாட்சிா் தீபா ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கினா். திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் ஊராட்சி ப... மேலும் பார்க்க