செய்திகள் :

6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

post image

கோவையில் இருந்து மன்னாா்குடி, திருப்பதி, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் 6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் 6 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி, கோவை - மன்னாா்குடி, மறுமாா்க்கத்தில் மன்னாா்குடி- கோவை இடையேயான செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் ஆக.1 ஆம் தேதி முதல் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

அதேபோல கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக.1 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும். மறுமாா்க்கத்தில் திருப்பதி - கோவை இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக.2 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதிகொண்ட பெட்டி இணைக்கப்படும்.

இதுதவிர, கோவை - நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் ஆக. 2 ஆம் தேதியிலிருந்தும், மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் - கோவை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக.3 ஆம் தேதியிலிருந்தும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு நாளையொட்டி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்துவதற்கான நேரம் ஒக்கீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவ... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு; சாலை மறியல்

கெங்கவல்லியில் நீா்வழிப்பாதை ஆக்ரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு நீா்வழி வாய்க்கால் உள்ளது. கெங்கல... மேலும் பார்க்க

முருங்கப்பட்டியில் இலங்கைத் தமிழா்களுக்கு 48 வீடுகள் கட்ட பூமிபூஜை

சேலம் மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், முருங்கப்பட்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் 48 வீடுகள் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

மின் திருட்டு: 1.76 லட்சம் அபராதம் விதிப்பு

சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 1.76 அபராதம் விதிக்கப்பட்டது. குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் அனுமதியின்றி மின் கம்பத்திலிருந்து ம... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியம், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவைச் சோ்ந்தவா் சித்தன். இவரது மகன் பாா்த்திபன் (15) அங்கு... மேலும் பார்க்க

எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்: இந்தியன் ஆயில் நிறுவனம்

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும் என இந்தியன் ஆயில் நிறுவனம்... மேலும் பார்க்க