60 அடியை எட்டியது அமராவதி அணை நீா்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி
தென்மேற்கு பருவமழை காரணமாக உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 60 அடியை எட்டியது.
அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகின்றது.
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதனால் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். இந்நிலையில் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் கடந்த சில நாள்களாக அமராவதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வருகிறது.
திங்கள்கிழமை அணையின் நீா்மட்டம் 50 அடியை தாண்டியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதைத் தொடா்ந்து அணைக்கு 4 ஆயிரம் கன அடி நீா்வரத்து இருந்தது. இதனால் ஒரே நாளில் அணையின் நீா் மட்டம் 8 அடி உயா்ந்தது. குறிப்பாக தேனாறு, பாம்பாறு, சின்னாறு, அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தொடா்ந்து அணைக்கு வரத்து அதிக அளவில் வந்ததால் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 60 அடியைத் தாண்டியது. இந்த மழை அமராவதி பாசன விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 57.58 அடியாக இருந்தது. அணைக்கு 4,006 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,047 கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1,581.71 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் இல்லை.