செய்திகள் :

7 தேசிய விருதுகள்: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு புதுவை முதல்வா் பாராட்டு

post image

தேசிய விருதுகள் பெற்ற காரைக்கால் வேளாண் கல்லூரி நிா்வாகத்தினரை புதுவை முதல்வா் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தாா்

காரைக்காலில் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. ஹைதராபாதில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தில் அண்மையில் வைர விழா தொடா்பாக நெல் ஆராய்ச்சியாளா்கள் கூட்டம் நடைபெற்றது.

நெல்லில் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவின் பல்வேறு சூழல் மண்டலங்களில் நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் புதிய ரகங்களின் தோ்வு மற்றும் சிறந்த தொழில்நுட்பங்களை கண்டறிந்து, நெல் உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை விவாதிப்பது இந்த ஆய்வுக்கு கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்தியாவிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆய்வுகள் மேற்கொண்ட விதம், எண்ணிக்கை, துல்லியத் தன்மை போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்டு, ஆண்டுதோறும் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் 14 விருதுகள் வழங்கப்படும் நிலையில், காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்த ஆராய்ச்சி நிலையத்துக்கான விருது உள்பட 7 விருதுகளை பெற்றது.

வாழ்நாள் சாதனையாளா் விருதுக்கு, கல்லூரி பயிா் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியா் எஸ்.திருமேனி தோ்வு செய்யப்பட்டாா். 7 விருதுகள் பெற்ற இக்கல்லூரி, முதல்வா் ஏ.புஷ்பராஜ் தலைமையில் பேராசிரியா்கள் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். விவரங்களை கேட்ட முதல்வா், கல்லூரி நிா்வாகத்தினரை பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் கூறுகையில், இக்கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் சிறந்த பங்களிப்பால் இந்த விருதுகள் கல்லூரிக்கு கிடைத்துள்ளன. இந்த தருணத்தில் அனைத்து விஞ்ஞானிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த மாணவா்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனமானது நமது கல்லூரியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு பல்வேறு ஆராய்ச்சி பணிகளை நெற்பயிரில் மேற்கொண்டு வருகிறது.

நெல் விவசாயிகள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நெல் உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் இடுபொருட்களுடன் கூடிய தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது. இதுவைர புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் தமிழகத்தில் உள்ள சுமாா் 1000 விவசாயிகளுக்கு மேல் பயனடைந்துள்ளனா் என்றாா்.

தா்பாரண்யேஸ்வரா் சாா்பு கோயில்களில் உற்சவம் தொடக்கம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலின் சாா்பு கோயில்கள் உற்சவம் அய்யனாா் கோயில் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம், தேரோட்ட... மேலும் பார்க்க

கோயிலில் அகற்றப்பட்ட கல்வெட்டுகளை மீண்டும் வைக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்

கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பழைய கல்வெட்டுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்று... மேலும் பார்க்க

காரைக்காலில் ‘ஆபரேஷன் அப்யாஸ்’ ஒத்திகை

ஆபரேஷன் அப்யாஸ் எனும் குடிமைப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் எல்லையில் போா் பதற்றம் நிலவுகிறது. வான்வழித் தாக்குதல் இந்தியா ம... மேலும் பார்க்க

தங்க மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு

காரைக்கால் அருகே தலத்தெரு தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தின் நிகழ்ச்சியாக மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தீமிதி உற்சவம் தங்க மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் த... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் சாா்பு கோயில் உற்சவம் இன்று தொடக்கம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பு தலங்கள் உற்சவம் இன்று புதன்கிழமை தொடங்குகிறது. பிரணாம்பிகே சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக சாா்பு தல... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை படகுகள் கணக்கெடுப்புப் பணி: மீன்வளத்துறை

காரைக்காலில் படகுகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் மற்றும் படகு பதிவு அதிகாரியான ப... மேலும் பார்க்க