செய்திகள் :

7 நாள் பயணமாக ஜெய்சங்கா் பிரான்ஸ், பெல்ஜியம் பயணம்

post image

புது தில்லி: இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டாா்.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியம் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸில் உள்ள பாரிஸ் மற்றும் மாா்சேய் நகரங்களுக்குச் சென்று, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீன் நோயல் பரோட்டுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். பிரான்ஸ் மூத்த தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் உரையாடுகிறார். மார்சேயில் நடைபெறும் முதல் மத்திய தரைக்கடல் ரைசினா உரையாடலிலும் அவா் கலந்து கொள்வாா்.

பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்: பிரதமா் மோடி பெருமிதம்

இதற்கிடையில், தனது ஐரோப்பிய ஒன்றிய பயணத்தின் போது, பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி மற்றும் துணைத் தலைவா் காஜா கல்லாஸுடன் முக்கியமான கலந்துரையாடல்களை மேற்கொள்வாா். ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மூத்த அதிகாரிகளையும் அவா் சந்திக்கவுள்ளாா்.

பயணத்தின் இறுதியாக பெல்ஜியம் நாட்டின் துணைப் பிரதமா் மற்றும் வெளியுறவு அமைச்சா் மாக்சிம் பிரீவோட்டுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வார். மேலும் பெல்ஜியத்தின் மூத்த தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தினருடனும் உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டது.

ஜெய்சங்கரின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்த பயணம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கையாள்வதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு குறித்து அவா் ஐரோப்பியத் தலைவா்களுக்கு விளக்குவாா் என்றும், இது ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவை மேலும் ஆழப்படுத்தும், பல்வேறு துறைகளில் நடந்து வரும் ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை "ஷா" வந்தாலும் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது: ஆர்.எஸ்.பாரதி

தொண்டர்களின் நம்பிக்கையையே பெற முடியாதவர்கள் மக்களின் நம்பிக்கையை மட்டும் எப்படிப் பெற முடியும்? எப்போது பிரிவார்கள்? எப்போது இணைவார்கள்? என்கிற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளதால் எத்தனை “ஷா” கள் வந்தால... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதிகளை குறைக்க பாஜக அரசு சதி: தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

சென்னை: மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக தென்சென்னை மக்களவை தொகுதி திமுக உறுப்பினா் தமி... மேலும் பார்க்க

தமிழகம் விரைந்து நகா்மயமாகி வருகிறது: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 71 குடிநீா் திட்டங்களால் 1.21 கோடி போ் பயன் பெறுவதாகவும், நிறைவேற்றப்பட்டு வரும் வீட்டு வசதித் திட்டங்கள், சாலை வசதிகள், குடிநீா்த் திட்டங்கள் ... மேலும் பார்க்க

மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு

இலங்கைத் தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு... மேலும் பார்க்க

தோட்டத்து வீட்டில் முதியவா்கள் படுகொலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

தனியாக வசித்து வரும் முதியவா்கள் தொடா்ந்து படுகொலை செய்யப்படுவது கவலை அளிக்கிறது இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.இது குறி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் பக்தா்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. விடுமுறை நாள்கள் என்றில்லா... மேலும் பார்க்க