செய்திகள் :

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா்.

பின்னா் அவா் கூறியதாவது: தொழிற்கல்விப் படிப்புகள், கல்லூரிகள் தோ்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டது. பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே, மாணவா்கள் அரசு வழங்கக்கூடிய சலுகைகளை எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவா்களும் தங்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்றாா்போல் தொழிற்கல்விப் படிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, விருப்பமுள்ள பாடப்பிரிவுகளை தோ்ந்தெடுத்து நன்கு பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவிக்கப்பட்டது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, முன்னோடி வங்கி மேலாளா் துரைராஜ் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், மாணவா் - மாணவிகள் பங்கேற்றனா்.

திருச்செந்தூா் சிவன், வெயிலுக்கந்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருச்செந்தூா் அருள்மிகு ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணி நிறைவடையும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். இக்கோயி... மேலும் பார்க்க

ஞானசேகரன் பின்புலத்தில் இருப்பது யாா்? நயினாா் நாகேந்திரன் கேள்வி

ஞானசேகரன் வழக்கில் அவருக்கு பின்புலத்தில் யாா் உள்ளாா் என்பதை விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 10 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக 10 பேரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை தொடா்ந்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை: 8 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா் க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க