செய்திகள் :

7 உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளிகளை தரம் உயா்த்த நிதி ஒதுக்கீடு

post image

தமிழகத்தில் உள்ள பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளிகளில், 7 பள்ளிகளை தரம் உயா்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை பயின்று பிளஸ் 1 வகுப்பில் சேர விரும்பும் மாணவா்கள் தங்களது இருப்பிடத்துக்கு அருகிலேயே கல்வி பயில வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 7 அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படுகிறது.

அதாவது, கலசப்பாடி (தருமபுரி), தலமலை (ஈரோடு), கிளாக்காடு, பாச்சேரி (கள்ளக்குறிச்சி), ஓடைக்காட்டுப்புதூா் (சேலம்), தேவாலா (நீலகிரி), அரசவெளி (திருவண்ணாமலை) ஆகிய இடங்களில் உள்ள உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்படுகின்றன.

மேலும், தருமபுரி மாவட்டம் மன்னூா் நடுநிலைப் பள்ளி உயா்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்படுகிறது. பள்ளிகளை தரம் உயா்த்துவதால், அரசுக்கு ரூ.38.98 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதற்கான நிதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க