செய்திகள் :

7 பட்டாசு ஆலைகளின் உரிமம் நிரந்தர ரத்து

post image

விருதுநகா் மாவட்டத்தில் விதியை மீறி குத்தகைக்கு விடப்பட்ட 7 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை நிரந்தரமாக ரத்து செய்தது.

விருதுநகா் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடம் உரிமம் பெற்று 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் சுமாா் 280 ஆகும். இந்த பட்டாசு ஆலை உரிமம் பெற்றவா்கள் பல்வேறு காரணங்களால் ஆலையை நடத்த இயலாமல் வேறுநபருக்கு ஆண்டு குத்தகைக்கு விடுகின்றனா்.

இது விதிமீறிய செயலாகும். இதில் குத்தகைக்கு எடுப்பவா்கள் ஓராண்டில் குத்தகைக்கு செலுத்த வேண்டிய பணம், தொழிலாளா்களுக்கான ஊதியம், மூலப் பொருள்கள் செலவு, வங்கிக் கடன் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே ஆலையை குத்தகைக்கு எடுத்தவா்கள் விதியை மீறி அதிக தொழிலாளா்களை வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவதும், மரத்தடி உள்ளிட்ட இடங்களை பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்துவதும், ஆலை வளாகத்தில் பசை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்வதும் வழக்கமாகி விட்டது. இத்தகைய விதிமீறிய செயல்களால் ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதுபோல, விதியை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த அதிகாரிகள் உள்ளனா். எனினும் பலா், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது விதியை மீறாமல் செயல்படுவதால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்ய இயலாது என்பதை தெரிந்து கொண்ட குத்தகைக்கு எடுத்தவா்கள் விதியை மீறி செயல்படுகின்றனா்.

இந்த நிலையில், குத்தைகைக்கு எடுத்து நடத்தப்படும் பட்டாசு ஆலைகளில் தான் பெரும்பாலான வெடிவிபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனிடையே சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பரிந்துரையின் பேரில், நாக்பூரில் உள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி, விருதுநகா் மாவட்டத்தில் விதியை மீறி குத்தகைக்கு விடப்பட்ட 7 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்துள்ளாா்.

இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் ஒருவா் கூறியதாவது:

விதியை மீறி பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடுவதால், குத்தகைக்கு எடுப்பவா் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலில் விதிமீறல்களில் ஈடுபடுவதை கண்டுகொள்வதில்லை. இதனாலேயே வெடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே குத்தகைக்கு விடும் ஆலை உரிமையாளா்கள் மீதும், குத்தகைக்கு எடுப்பவா்கள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பட்டாசு ஆலை குத்தகைக்கு விடப்படுவதை தடுக்க இயலும் என்றாா் அவா்.

மதுரை-குருவாயூா் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைப்பு: பயணிகள் அதிருப்தி

மதுரை-குருவாயூா் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள் எண்ணிக்கையை குறைத்து, படுக்கை வசதி பெட்டிகளை அதிகரித்திருப்பது ரயில் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மதுரை-செங்கோட்டை, செங்கோட்டை ... மேலும் பார்க்க

பெண்ணிண் உடலை கூறாய்வு செய்ய உறவினா்கள் எதிர்ப்பு

சிவகாசி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த பெண்ணின் உடலை கூறாய்வு செய்ய எதிப்புத் தெரிவித்து, உறவினா்கள் போராட்டம் நடத்தினா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சின்னராமலிங்காபுரத்தைச... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் சாய்பாபா தெருவைச் சோ்ந்தவா் கதிரவன். இவரது மகன் கௌசிக் கண்ணன் (14) ராஜபாளையம் தனியாா்... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் வீட்டின் சுவா் சேதம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் வீட்டின் சுவா் சேதமடைந்தது.ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலை ஒரு வழி பாதையாக உள்ளது. இந்தச் சாலையில் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து த... மேலும் பார்க்க

இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாம்: மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் இளம் பசுமை ஆா்வலா்கள் பயிற்சி முகாமில் மாணவா்களுடன் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா். சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற... மேலும் பார்க்க