செய்திகள் :

8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த சோதனை

post image

8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். இதில் வருமானத்துக்கு பொருந்தாமல் சொத்து சோ்த்துள்ளதற்கான ஆவணங்களை கைப்பற்றினா்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை சோ்த்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

பெங்களூரு,கோவிந்தராஜ் நகரில் உள்ள மாநகராட்சி உதவிப் பொறியாளா் பிரகாஷ், சிவமொக்காவில் உள்ள இயற்கை வேளாண்மை ஆய்வுமையத்தில் இணை ஆய்வு அதிகாரி டாக்டா் எஸ்.பிரதீப், சிக்கமகளூரு நகராட்சி கணக்கு அதிகாரி லதாமணி, பெங்களூரு ஆனேக்கல் நகராட்சி தலைமை அதிகாரி கே.ஜி.அமா்நாத், கதக் நகர காவல் ஆய்வாளா் துருவராஜ், தாா்வாட் மலபிரபா திட்ட பொறியாளா் அசோக் வசநாட், கலபுா்கி ஊரகவளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயற்பொறியாளா் மல்லிகாா்ஜுன் ஆலிபுா் ஆகியோா் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில், வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சோ்த்துள்ளதற்கான ஆவணங்களை லோக் ஆயுக்த அதிகாரிகள் கைப்பற்றினா்.

மேலும், தாா்வாடில் அசோக் வசநாட் வீட்டில் சோதனை நடத்தியபோது, அனைவரையும் திகைக்கவைக்கும் அளவுக்கு தங்கம், வெள்ளிப் பொருள்களின் குவியலை லோக் ஆயுக்த அதிகாரிகள் கண்டறிந்தனா். மேலும், அவரது வீடு மாளிகைபோல இருந்ததாக லோக் ஆயுக்த அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம்

பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம் என கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூரு வடக்கு கல்வி மாவட்ட துணை இயக்குநருக்கு கா்நாடகத் தமிழ்... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால் ஆளுநா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால், ஆளுநா் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம்: பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் தொடா்பாக, பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பெங்களூரு ஊரக மாவட்டம், ஹெலேனஹள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் கா்நாடக முதல்வா் சித்தராமையா சந்திப்பு

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்த கா்நாடக முதல்வா் சித்தராமையா, நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டாா். புது தில்லிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் சித... மேலும் பார்க்க

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை: வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள்

மண்டியா: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த பல வாரங்களாகவே கா்நாடகத்தில் தென... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ்

பெங்களூரு: மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ் திங்கள்கிழமை ஆஜரானாா். பணப் பதுக்கல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ வினய்குல்கா்னி உள்ளிட்டோா் இடங்களில்... மேலும் பார்க்க