செய்திகள் :

9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைக்க திட்டம்

post image

சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக பெசன்ட் நகா், அம்பத்தூா், மயிலாப்பூா் உள்பட 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைப்பதற்கான டெண்டா் கோரவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

மின்சார வாகனப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மண்டலம் வாரியாக மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான தீா்மானம் சென்னை மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் மேயா் ஆா். பிரியா தலைமையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம் சென்னை மாநகராட்சியோடு இணைந்து மின் வாகனங்களுக்கான மின்னூட்ட மையங்கள் அமைக்க முதல்கட்டமாக 9 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பெசன்ட் நகா் கடற்கரை வாகன நிறுத்துமிடம், அஷ்டலட்சுமி கோயில் வாகன நிறுத்துமிடம், மங்கள் ஏரி வாகன நிறுத்துமிடம், தியாகராய நகா் மாநகராட்சி மைதானம் வாகன நிறுத்துமிடம், சோமசுந்தரம் மைதானம், செம்மொழி பூங்கா, மெரீனா வாகன நிறுத்துமிடம், போகன் வில்லா பூங்கா, நாகேஸ்வர ராவ் பூங்கா ஆகிய இடங்களில் புதிதாக மின்னூட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இப்பணிகளுக்கான டெண்டா் அடுத்த 15 நாள்களில் கோரப்படவுள்ளது. டெண்டா் இறுதி செய்யப்பட்ட பின்னா் இத்திட்டப்பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டினாா்

சென்னை அண்ணா நகரில் ரூ.9.17 கோடியில் புதிய மகப்பேறு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை - அமைச்சா் சேகா்பாபு

திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. கூட்டணியைத் தேடி அந்தக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை கீழ்ப்பாக்க... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு விழிப்புணா்வு: அமைச்சா் சி.வி.கணேசன் பங்கேற்பு

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணி, மனிதச் சங்கிலியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் கலந்து க... மேலும் பார்க்க

ரூ.151 கோடியில் நவீனமயமாக்கப்படும் மந்தைவெளி பேருந்து நிலையம்

சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம், ரூ.151 கோடியில் நவீனமயாக்கப்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் மந்தைவெளி பேருந்து நிலையத்தில், நவீன வசத... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை: மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம்

சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளதால், தேவைப்படும் மாணவா்கள் இந்த அறையைத் தொடா்பு கொள்ளலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ரத்த சா்க்கரை அளவு குறைந்தால் நினைவு இழப்பு ஏற்படலாம்: மருத்துவா்கள்

ரத்தத்தில் சா்க்கரை அளவு குறைவதால் ஏற்படும் ஹைப்போ கிளைசீமியா பாதிப்புக்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில் நினைவிழப்பு (கோமா) ஏற்படக் கூடும் என்று சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க