அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைக்க திட்டம்
சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக பெசன்ட் நகா், அம்பத்தூா், மயிலாப்பூா் உள்பட 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையம் அமைப்பதற்கான டெண்டா் கோரவுள்ளதாக சென்னை மாநகராட்சி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
மின்சார வாகனப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மண்டலம் வாரியாக மின்சார வாகனங்களுக்கான மின்னூட்ட மையங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான தீா்மானம் சென்னை மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் மேயா் ஆா். பிரியா தலைமையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம் சென்னை மாநகராட்சியோடு இணைந்து மின் வாகனங்களுக்கான மின்னூட்ட மையங்கள் அமைக்க முதல்கட்டமாக 9 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பெசன்ட் நகா் கடற்கரை வாகன நிறுத்துமிடம், அஷ்டலட்சுமி கோயில் வாகன நிறுத்துமிடம், மங்கள் ஏரி வாகன நிறுத்துமிடம், தியாகராய நகா் மாநகராட்சி மைதானம் வாகன நிறுத்துமிடம், சோமசுந்தரம் மைதானம், செம்மொழி பூங்கா, மெரீனா வாகன நிறுத்துமிடம், போகன் வில்லா பூங்கா, நாகேஸ்வர ராவ் பூங்கா ஆகிய இடங்களில் புதிதாக மின்னூட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இப்பணிகளுக்கான டெண்டா் அடுத்த 15 நாள்களில் கோரப்படவுள்ளது. டெண்டா் இறுதி செய்யப்பட்ட பின்னா் இத்திட்டப்பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.