செய்திகள் :

Allahbadia: போன் ஸ்விட்ச் ஆப், வீட்டிற்குப் பூட்டு, தேடும் போலீஸ்.. யூடியூப்பர் அல்லாபாடியா தலைமறைவு

post image

யூடியூப்பர் அல்லாபாடியா மற்றும் அபூர்வா மகிஜா ஆகியோர் நடத்திய 'India's Got Latent' என்ற ரியாலிட்டி ஷோவில் அல்லாபாடியா பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

மும்பை மற்றும் அஸ்ஸாம் போலீஸார் இது தொடர்பாக அல்லாபாடியா, அபூர்வா மகிஜா, சமய் ரைனா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷோவில், "உங்களது பெற்றோர் உறவு வைத்துக்கொள்வதைப் பார்ப்பீர்களா?" என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் அல்லாபாடியா கேட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதற்காக அல்லாபாடியா மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனாலும், பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

மும்பை போலீஸார் அல்லாபாடியாவிற்கு நேரில் ஆஜராகக் கூறி இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. மும்பை வர்சோவாவில் உள்ள தனது வீட்டில் வந்து வாக்குமூலம் வாங்கும்படி அல்லாபாடியா கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை போலீஸார் ஏற்றுக்கொள்ளவில்லை.

அபூர்வா

அஸ்ஸாம் போலீஸாரும் அல்லாபாடியாவைத் தேடி மும்பை வந்துள்ளனர். மும்பை கார்ரோடு போலீஸாரும், அஸ்ஸாம் போலீஸாரும் சேர்ந்து அல்லாபாடியா வீட்டிற்குச் சென்றனர். ஆனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர் எங்குச் சென்றார் என்று தெரியவில்லை. அவரது மொபைல் போனும் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற உத்தரவிடவேண்டும் என்று கோரி அல்லாபாடியா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் மகன் அபினவ் சந்திரசூட் மூலம் தாக்கல் செய்துள்ளார். அதில் அல்லாபாடியா தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டு இருந்தார்.

இம்மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதனைத் தலைமை நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதோடு விசாரணைக்கான தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உட்பட இதோடு தொடர்புடைய 7 பேரிடம் மும்பை போலீஸார் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். மும்பை சைபர் பிரிவு போலீஸார் மொத்தம் 50 பேருக்குச் சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

டெல்லி: அடுத்தடுத்து வந்த 100 பீட்ஸாக்கள்; எல்லாம் கேஷ் ஆன் டெலிவரி! - Ex லவ்வரை அதிர வைத்த பெண்

காதலில் பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பேரில் ஒருவர் எதாவது வழியில் மற்றவர்களை பழிவாங்குவதுண்டு. டெல்லியில் அது போன்று பிரேக்அப் ஆன பெண் ஒருவர் தனது காதலனை நூதன முறையில் பழிவா... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு டு ஆர்.சி.பி நியூ கேப்டன் - இந்த வார கேள்விகள்

த.வெ.க தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் பாதுகாப்பு, பி.எஸ்.என்.எல் (BSNL) லாபம், குடியரசுத் தலைவர் ஆட்சி, அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா, ஆர்.சி.பி அணிக்குப் புதிய கேப்டன் நியமனம் என இந்த வார சம்பவ... மேலும் பார்க்க

இத்தாலிக்குத் தத்து போனவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய கதை... தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்தவர் உத்தாண்டபிள்ளை. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே இவருடைய மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இவருக்குப் பாலமுருகன் என்ற... மேலும் பார்க்க

`நட்பு காதலாக மாறி..!’ - சுஷ்மிதா சென் உடனான உறவு முறிவு; புதிய காதலியை அறிமுகம் செய்த லலித் மோடி

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் லலித் மோடி. அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வெளி... மேலும் பார்க்க

Dhoni: "என் காதல் தீராமல் சேமித்தேனே என் ஆழ்மனம் நீயாக..." - தோனி, சாக்‌ஷி க்ளிக்ஸ் | Photo Album

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!https://tinyurl.com/Velpari-Vikatan-Play மேலும் பார்க்க

`பேபி, இனி உலகம் முழுவதும் பறக்கலாம்.!’ - சிறையில் இருந்தும் ஜாக்குலினுக்கு விமானம் பரிசளித்த சுகேஷ்

டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களிடம் தான் அரசு அதிகாரி, அமைச்சருக்கு வேண்டப்பட்டவர் என்று கூறி மோசடி செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டு டெல... மேலும் பார்க்க