செய்திகள் :

Anurag Kashyap: "பான் இந்தியா படம் என்ற பெயரில் பெரிய ஊழல் நடக்குது" - கொதிக்கும் அனுராக் காஷ்யப்

post image

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.

நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா', 'Rifle Club' படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தார். கொஞ்ச காலமாகவே அரசியல் குறித்தும் சினிமா உலகம் குறித்தும் வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக, பாலிவுட் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த வண்ணமிருக்கிறார். சமீபத்தில், 'பாலிவுட்டில் பிறக்காமல், தமிழ்நாடு, கேரளா எனத் தென்னிந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி எனக்குத் தோன்றும்' என்று பேசியிருந்தார் .

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

இந்நிலையில் பான் - இந்தியா திரைப்படங்கள் என்பது ஒரு பெரும் ஊழல் என்று பேசியிருக்கும் அனுராக் காஷ்யப் , "பான் இந்தியா என்ற பெயரில் பெரிய பட்ஜெட்டில் 3-4 ஆண்டுகள் படமெடுக்கிறார்கள்.

படத்திற்கான பட்ஜெட் பணத்தைப் படமெடுப்பதில் செலவழிக்கிறார்களோ இல்லையோ, தேவையில்லாத பெரியப் பெரிய செட்கள் போடுவதிலேயே செலவழிக்கிறார்கள் சிலர்.

அப்படிப்பட்ட திரைப்படங்கள் 1% மட்டுமே வெற்றிபெறுகின்றன. பல திரைப்படங்கள் காணாமல் போகின்றன.

அதிகமான பணம் 'பான் இந்தியா' என்ற பெயரில் விணாடிக்கப்பட்டு பெரும் ஊழலே இங்கு நடக்கிறது.

பாகுபலி, கே.ஜி.எஃப்
பாகுபலி, கே.ஜி.எஃப்

'பாகுபலி'படத்திற்குப் பல மொழிகளில் கிடைத்த வரவேற்பிற்குப் பிறகே இந்த பான் இந்தியா ட்ரெண்ட் பிரபலமானது. 'பாகுபலி' படம் நல்ல வரவேற்பைப் பெற்றால் அதே மாதிரியான திரைப்படங்கள் எடுக்கிறார்கள்.

'கே.ஜி.எஃப்' நல்ல வரவேற்பைப் பெற்றால் தொடர்ந்து அதே மாதிரியான திரைப்படங்கள் எடுக்கிறார்கள். இப்படித்தான் ஒரே ட்ரெண்டிற்குப் பின்னாடி செல்கிறது நம் சினிமா துறை.

அது மாற வேண்டும். படத்தின் பட்ஜெட்டையும், பான் இந்தியாவா, இல்லையா என்பதையும் படத்தின் கதைதான் முடிவு செய்யவேண்டும். நாம் அந்த முடிவை எடுக்கக் கூடாது" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

"தமிழ் சினிமா பாடல்களில் ஆங்கிலம்தான் அதிகம் இருக்கிறது; முன்பெல்லாம்..." - அனுராக் காஷ்யப் வேதனை

`Dev.D', `Black Friday', `Gangs of Wasseypur' படங்கள் மூலம் பாலிவுட்டில் இயக்குநராகப் பிரபலம் ஆனவர் அனுராக் காஷ்யப்.சமீபத்தில் இவர் நடித்திருந்த 'மகாராஜா', 'Rifle Club' படங்களிலும் கவனம் ஈர்த்திருந்தா... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்காக போரை நிறுத்திய ஆப்கானிஸ்தான் அதிபர் மகள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இப்போது போர்பதட்டம் நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பு ஒன்றுக்காக உள்நாட்டு போர் நிறுத்தப்பட்ட சம்பவம் இப்போது நினைவுகூர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. பாகி... மேலும் பார்க்க

Operation Sindoor: வியாபாரமாகிறதா தேசபக்தி? தலைப்புக்குத் தயாரிப்பாளர்களிடையே போட்டி; நிலவரம் என்ன?

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த வாசகம் இந்தியா முழுவதும் தேசபக்திக்கான அடையாளமாக மாறியிருக்கிறது.அதனால் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் வார்த்... மேலும் பார்க்க

Operation Sindoor பெயரில் திரைப்பட அறிவிப்பு; கிளம்பிய எதிர்ப்பால் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறும் இந்தியா, பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்கு... மேலும் பார்க்க

`ஒரே நேரத்தில் 18 பாட்டில் குடிப்பேன்; ஒரே நாளில் நிறுத்தியது எப்படி?’ - பாடலாசிரியர் ஜாவேத் அக்தர்

பழம்பெரும் பாலிவுட் கதாசிரியர் மற்றும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் நடிகை ஷபானா ஆஸ்மியை திருமணம் செய்து கொண்டுள்ளார். தமிழில் வைரமுத்துவின் பாடல்கள் போன்று இந்தியியில் ஜாவேத் அக்தரின் பாடல்கள் மிகப் பிர... மேலும் பார்க்க

Deepika Padukone: மகளுக்கு `துவா' எனப் பெயர் வைத்தது ஏன்? - தீபிகா பகிர்ந்த சுவாரஸ்யம்!

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு துவா (Dua) எனப் பெயர் சூட்டியுள்ளனர்.Deepika Padukone - Ranveer Singhசமீபத்தில் தீ... மேலும் பார்க்க