செய்திகள் :

Baakiyalakshmi : செல்வியை விட்டுக் கொடுத்த பாக்யா, எழிலின் வரம்பு மீறிய வார்த்தைகள்

post image

பாக்யலட்சுமி சீரியல் கதைக்களம் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியிருக்கிறது. கல்லூரியில் படிக்கும் இனியா, பாக்யா வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகனைக் காதலிக்கிறார். ஆகாஷ் பல சந்தர்ப்பங்களில் வெளியே சந்திக்க வேண்டும், வீட்டு விசேஷங்களில் சந்தித்துக்கொள்ள வேண்டாம் என்று இனியாவிடம் சொல்லியும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இம்முறை இனியா-ஆகாஷ் காஃபி ஷாப்பில் சந்திப்பதை கோபி பார்த்துவிட்டார். கோபி இனியாவின் மொபைலை செக் செய்து, ஆகாஷும் இனியாவும் காதலிப்பதை உறுதி செய்துவிட்டார்.

கோபி வீட்டில் இருந்த அனைவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்கிறார். செழியன், கோபி, ஈஸ்வரி என அனைவரும் இனியாவைக் கடுமையாகத் திட்டுகின்றனர். செல்வியின் மகனை தரக்குறைவாகப் பேசுகின்றனர். இந்த வயதில் ஈர்ப்பு ஏற்படுவது சகஜம், அப்படி ஈர்ப்பு ஏற்படுவதற்குக்கூட தகுதி, தராதரம் வேண்டாமா? என்று செழியன் பேசியதெல்லாம் டூ மச்.

சீரியலின் ஆரம்பத்தில் செழியன், ஜெனி என்ற கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்தபோது வேற்று மதம் என்பதால் ஈஸ்வரி பிரச்னை செய்வார். ஜெனி செழியனுக்காக வீட்டை விட்டு வந்துவிடுவார், வீட்டை எதிர்த்துத் திருமணமும் நடக்கும். அந்த திருமணக் காட்சிகள் சீரியல் மீது பலருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. ஆனால் இம்முறை எதே செழியன் ஸ்டேட்டஸ் என்று வரும்போது காதலுக்கு எதிரியாக மாறுவது முரண்.

செழியன் ஆகாஷை தரக்குறைவாகப் பேசும் காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தது. அதனைத் தவிர்த்திருக்கலாம். இந்தப் பிரச்னைகள் நடக்கும்போது செல்வி பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார்.

கோபி, செழியன் , ஈஸ்வரி மாறி மாறி செல்வியைத் திட்டும் போது பாக்யா அமைதியாக நின்றுக் கொண்டிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் மாறி மாறி செல்வியின் குடும்பச் சூழல், ஸ்டேட்டஸ், அவரின் கேரக்டர் என டோட்டல் டேமேஜ் செய்யும்போது, ``பாக்யா இப்பயாவது வாயத் திறந்து பேசும்மா’’ என்பதே ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்.

செல்வியைக் கடுமையாகத் திட்டி வீட்டைவிட்டே துரத்தும்வரை பாக்யா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. செல்வி பாக்யாவின் சொத்துக்களை பங்குபோட மகனுடன் சேர்ந்து பிளான் போட்டுதான் இனியாவைக் காதலிக்க வைத்தார் என்று ஈஸ்வரி சொன்னபோது கூட பாக்யா எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை. எழில் மட்டும் தான் இந்த விஷயத்தில் யதார்த்தத்தை எடுத்துச்சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் ஈஸ்வரி அவரின் திருமண வாழ்க்கையைப் பற்றி விமர்சித்து எழிலையும் பேசவிடாமல் செய்கிறார்.

நேற்றைய எபிசோடில் இனியா பாக்யாவிடம் வந்து பேசுகிறார். ’’நான் தான் ஆகாஷைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். ஆகாஷ் முதலில் இந்தக் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதெல்லாம் வேணாம் என்று ஆகாஷ் சொன்னான், “ என்று பாக்யாவிடம் சொல்கிறார். பாக்யா இனியாவைத் திட்டி அனுப்புகிறார்.

இந்த வாரத்திற்கான புரொமோவில் செழியனும் கோபியும் ஆகாஷ் வீட்டிற்கு செல்கின்றனர். ஆகாஷை தெருவில் வைத்து அடிக்கின்றனர். இனியா பக்கம் இனி வராத என்கின்றனர். இந்த விஷயம் பாக்யாவுக்குத் தெரிந்து, செழியனைக் கேள்வி கேட்கிறார். ஆகாஷை அடிக்கும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது என்று செழியனைக் கேட்கிறார் பாக்யா.

Manimegalai: `பணம் கட்டலைனு காரை எடுத்துட்டுப் போயிட்டாங்க; அப்போ...' - மணிமேகலை எக்ஸ்க்ளூசிவ்

`டான்ஸ் ஜோடி டான்ஸ் - ரீலோடட் சீசன் 3' நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஆங்கரிங் பக்கம் வந்திருக்கிறார் தொகுப்பாளினி மணிமேகலை. பல நிகழ்ச்சிகளின் மூலம் நம்மை மகிழ்வித்தவர் சமீபத்தில் புதியதாக வீடு ஒன்றையும... மேலும் பார்க்க

பெண் வேஷம் போட்டது நிஜம்தான்; ஆனா, அந்த வீடியோ...`பகீர்' குற்றச்சாட்டு குறித்து விக்ரமன் சொல்வதென்ன?

'அபார்ட்மென்ட்டில் பெண் வேடமிட்டு இரவு நேரங்களில் சிலருக்கு பாலியல் தொந்தரவு தந்தார்' என பிக் பாஸ் விகரமன்குறித்து சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேற்றையதினம் வீடியோ ஃபுட்டேஜ் ஒன்று வெளியானது குறி... மேலும் பார்க்க

Siragadikka aasai : சிந்தாமணியின் திட்டம் இதுதான் - ஏமாற்றப்பட்ட மீனா எப்படி சமாளிப்பார்?

சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் பரசு மகளின் திருமண ஏற்பாடுகள், மீனாவின் புதிய பிஸ்னஸ், ஸ்ருதி அம்மா செய்த பிரச்னை என கதை நகர்ந்தது. கூடவே இரண்டு காதல் ஜோடிகளும் புதிதாக கைகோர்த்துள்ளனர். ஸ்ருதி அம... மேலும் பார்க்க

Siragadika Aasai: `சிறகடிக்க ஆசை மூலமாக பலரும் என்னை திட்டுறாங்க; ஆனா அதுதான் பாராட்டு' - சுஜாதா

`ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாடல் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பரிச்சயமானவர் `ஈசன்' சுஜாதா. இந்தப் பாடலே இவரின் பெயருக்கு ஒரு அடையாளத்தையும் தேடிக் கொடுத்தது. நடன இயக்குநராக பல முன்னணி கதாநாயகன்களுடன் ... மேலும் பார்க்க

Baakiyalakshmi : இனியாவின் காதலால் வெடித்தப் பிரச்னை... துரத்தப்பட்ட செல்வி!

பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா -கோபி விவாகரத்து காட்சிகளுக்குப் பிறகு முழுக்க முழுக்க பாக்யா வீட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.அம்மாவின் பேச்சைக் கேட்டு கோ... மேலும் பார்க்க

Siragadikka aasai : பெரிய பிரச்னையில் சிக்கிய மீனா; முத்து எப்படி சமாளிப்பார்?

சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்த்திராதப் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. பரசுவின் மகள் திருமணம், மனோஜ் சந்தித்த விபத்து, புதிதாக இரண்டு காதல் டிராக் என கதை களைகட்டுகிறது. தற்போது வெளியாகி... மேலும் பார்க்க