செய்திகள் :

Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - சத்தீஸ்கரில் என்ன நடந்தது?

post image

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அபுஜ்மத்தில் ஒரு மூத்த மாவோயிஸ்ட் தலைவர் மறைந்திருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. அதன் அடிப்படையில், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் மற்றும் கொண்டகான் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) தேடுதல் வேட்டை நடத்தியது. அபுஜ்மத் பகுதி கோவா மாநிலத்தை விட பெரிய அளவிலான நிலமாகும்.

இதன் பெரும்பகுதி நாராயண்பூரில் இருந்தாலும், பிஜாப்பூர், தண்டேவாடா, கான்கர் மற்றும் மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டம் வரை பரவியிருக்கிறது.

கடந்த மாதம் 21-ம் தேதி ஹித்மா மத்வி உள்பட உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் மற்றும் முக்கியமானவர்கள் கர்ரேகுட்டா மலைகளில் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அன்று முதல் தேடுதல் நடவடிக்கைகளத் தொடங்கினர். தொடர்ந்து மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.

`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' - ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்

சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார். நேற்று... மேலும் பார்க்க

பாபநாசம், கல்லிடைகுறிச்சி; தாமிரபரணியில் டன் கணக்கில் கழிவுகளை அள்ளி தூய்மை செய்த தன்னார்வலர்கள்!

பாபநாசம்பாபநாசம் கோயில் அருகே பரிகாரம் செய்து ஆற்றில் விடப்படும் துணிகளை அப்புறப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டல் படி, நம் தாமிரபரணி மற்றும் நெல்லை உழவாரப் பணிக் குழாம், மணிமுத்தாறு தமிழ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?

Doctor Vikatan: என்தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள். குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச்சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் கா... மேலும் பார்க்க

``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்கும் கேள்விகள்!

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை மத்திய அரசு நடத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா முழுக்க உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன. இரு நாடுகளுக்கு... மேலும் பார்க்க

Dental Care: யார் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்?

''இன்றைய நவீன உலகில், டூத் பேஸ்ட் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகிவிட்டது. பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க இரண்டு, மூன்று முறை பல் துலக்குபவர்களுக்குக்கூட பேஸ்ட் பற்றிய தெளிவு இருப்பதி... மேலும் பார்க்க