செய்திகள் :

Doctor Vikatan: கனவுகளே இல்லாத தூக்கம் வரமா, சாபமா?

post image

Doctor Vikatan: சிலருக்கு தூக்கத்தில் அடிக்கடி கனவுகள் வருகின்றன. சிலரோ, கனவுகளே இல்லாமல் தூங்குவதாகச் சொல்கிறார்கள். உண்மையில், கனவுகள் இல்லாத தூக்கம் என்பது வரமா, சாபமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நரம்பியல் சிகிச்சை  மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

அன்றாடம் நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள்தான் கனவுகளாகப் பிரதிபலிக்கும்.  கனவே இல்லாத தூக்கம் வரமா, சாபமா என்பது அவரவர் தூக்க நிலை, விருப்பம் போன்றவற்றைப் பொறுத்தது.  பொதுவாக எல்லோருக்குமே நல்ல, ஆழ்ந்த உறக்கம்தான் ஆசையாக இருக்கும்.

இரவு தூக்கமானது,  என்ஆர்இஎம் (NREM) தூக்கம் மற்றும் ஆர்இஎம் (REM) தூக்கம் என இரண்டு முக்கிய கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  என்ஆர்இஎம் என்பது Non-Rapid Eye Movement என்பதன் சுருக்கம். அதாவது, இந்தத் தூக்கத்தின்போது கண்களின் அசைவு வேகமாக இருக்காது. இதில்  மூன்று நிலைகள் இருக்கும்.

முதல் நிலை என்பது தூக்கத்தின் ஆரம்பம். இந்த நிலையில் நாம் முழுவதுமாகத் தூங்கிவிட மாட்டோம். விழித்திருக்கும் நிலையிலிருந்து தூக்க நிலைக்குச் செல்லும்  இடைப்பட்ட நிலை இது. இந்த நிலை சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இரண்டாவது சற்று ஆழ்ந்த தூக்க நிலை. உடல் வெப்பநிலை குறையும், இதயத் துடிப்பு மெதுவாகும். இந்த நிலையில், நாம் எளிதில் எழுந்து விடமாட்டோம். இது மொத்த தூக்க நேரத்தில் அதிக நேரம் நீடிக்கும்.

ஆர்இஎம் தூக்கத்தில்தான் பெரும்பாலும் நாம் தெளிவான மற்றும் தீவிரமான கனவுகளைக் காண்கிறோம்.

மூன்றாவது நிலைதான் மிகவும் ஆழ்ந்த தூக்க நிலை (deep sleep). இந்த நிலையில், உடல் திசுக்களைச் சரிசெய்தல், எலும்பு மற்றும் தசை வளர்ச்சி, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற முக்கியமான உடல் செயல்பாடுகள் நடைபெறும். இந்த நிலையில், ஒருவரை எழுப்புவது மிகவும் கடினம். இந்த நிலைதான் நமக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

ஆர்இஎம் (Rapid Eye Movement) தூக்கத்தின்போது,  கண்கள் வேகமாக அசைந்தபடி இருக்கும். உடலை அசைக்க முடியாது.   ஆர்இஎம் தூக்கத்தில்தான் பெரும்பாலும் நாம் தெளிவான மற்றும் தீவிரமான கனவுகளைக் காண்கிறோம். இது முடிந்ததும் மீண்டும்  என்ஆர்இஎம் தூக்கம் வரும். அடுத்து  ஆர்இஎம் தூக்கம் வரும். இந்த இரண்டும் ஒரே இரவில் மாறி மாறி பல முறை நிகழும்.  முழுமையான இரவுத் தூக்கம் பல சுழற்சிகளாக (cycles) நடக்கிறது. ஒவ்வொரு சுழற்சியிலும், நாம் முதலில் என்ஆர்இஎம் நிலைகளைக் கடந்து, பின்னர் ஆர்இஎம் தூக்கத்தை அடைகிறோம்.  தொந்தரவுகள் அற்ற ஆழ்ந்த உறக்கம்தான் பலரின் விருப்பமாகவும் இருப்பதால், கனவுகள் இல்லாத தூக்கத்தை வரம் என்றே சொல்லலாம்.  

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Longevity: நீண்ட நாள்கள் ஆரோக்கியமாக வாழ இவைதான் வழிகள்!

சராசரியாக 30 வயதிலிருந்தே உடல், முதிர்ச்சியை நோக்கியப் பயணத்தைத் தொடங்கிவிடும். ஆனால், சிறிது சிறிதாகவே நிகழ்வதால் அந்த மாற்றத்தின் விளைவை நாம் உணரக் குறைந்தது 10 வருடங்கள் ஆகும். 40 வயதைக் கடந்த பிறக... மேலும் பார்க்க

``வயது முதிர்வால் அல்ல; துறை உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்'' - TVK ஆனந்த்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சார்பில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க

``ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார்? நான் FIR பதிவு செய்வது அழகல்ல'' - எம்.பி கபில் சிபல்

முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் பதவி விலகலுக்கு பின்னர் அவரது இருப்பிடம் குறித்து எம்.பி. கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ’... மேலும் பார்க்க

``வ.உ.சி-யின் சுதேசி கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி'' - எல்.முருகன்

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ம் தேதியன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பா‌.ஜ.க சார்பில் நாடு முழுவதும் 'ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

Moringa Leaves: தலைமுடி உதிர்தல் முதல் மூட்டுவலி வரை சரியாக்கும் முருங்கைக்கீரை!

சிக்குரு, கிரஞ்சம், கிழவீ, சோபாஞ்சனம் எனப் பல பெயர்களைக் கொண்ட முருங்கை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லலாம். இதன் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் கு... மேலும் பார்க்க

``திராவிட மாடல் 2.0; நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்'' - மு.க.ஸ்டாலின்

தாம்பரத்தில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பட்டா வழங்கும் விழாவில்... மேலும் பார்க்க