செய்திகள் :

DOGE ``வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..'' - டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?

post image

அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார்.

எலான் மஸ்க் - ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் எலான் மஸ்க்கிற்கு அரசு செலவுகளைக் குறைக்கும் DOGE துறை ஒதுக்கப்பட்டது. அதனை நிர்வகித்து வரும் மஸ்க் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். DOGE துறை குறித்து பேசிய அவர், "நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தினசரி $4 பில்லியன் வரை செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முதல் 130 நாள்களுக்குள் பற்றாக்குறையை ஒரு டிரில்லியன் டாலர்கள் குறைக்கத் தேவையான பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டோம்.

தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும் முறைகேடுகளைக் கண்டறிந்து நிறுத்துவதும் தான் எங்கள் முதல் நோக்கம். இதற்காகவே நாங்கள் வேலை செய்து வருகிறோம். எங்களின் நடவடிக்கையால் $4 பில்லியன் டாலர் சேமிக்க முடிகிறது.

எலான் மஸ்க்

இதுவரை நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியைத் தருவதாகவே இருக்கிறது. எங்கள் நடவடிக்கை வெற்றி அடையாமல் போனால் அமெரிக்கா கடனில் மூழ்கிவிடும்.

முக்கியமான அரசு சேவைகளையும் பாதிக்காமல் 15 சதவீதம் வரை செலவைக் குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இந்த பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மே மாதம் நான் DOGE துறையில் இருந்து விலகலாம்" என்று கூறியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

எம்புரான்: ``முல்லைப் பெரியாறு குறித்த பொய் காட்சிகளை நீக்குக" - கம்பத்தில் விவசாயிகள் போராட்டம்

அண்மையில் நடிகர் மோகன்லால் நடிப்பில், இயக்குநர் பிரித்விராஜ் இயக்கத்தில் எம்புரான் திரைப்படம் வெளிவந்தது. இத் திரைப்படத்தில், முல்லைப்பெரியாறு அணை குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக பெரியாறு வைகை பாசன... மேலும் பார்க்க

``முல்லைப் பெரியாறு குறித்து பீதியை கிளப்பும் `எம்புரான்' படத்தை தடை செய்ய வேண்டும்'' - வைகோ

மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள எம்புரான் படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. முன்னதாக அதில் வரும் கலவரம் குறித்த சித்தரிப்புகள் குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவதாகக் கூறப்பட்டது. இதனால் வலதுச... மேலும் பார்க்க

நேபாளம்: `மீண்டும் மன்னராட்சி பிறக்கிறதா?' தலைநகர் காத்மாண்டுவில் வெடித்த கலவரம் - பின்னணி என்ன?

காத்மண்டு தெருக்களில் ஆர்பாட்டம்நமது அண்டை நாடான நேபாளத்தில் 21ம் நூற்றாண்டுக்கான புதிய சிக்கல் பிறந்துள்ளது. மக்கள் மக்களாட்சி அரசைக் களைத்துவிட்டு இந்து-மன்னராட்சி அரசை மீண்டும் அரியணை ஏற்ற வேண்டும்... மேலும் பார்க்க

Doctor Vikatan: மட்டன், சிக்கன், ஃபிஷ், எக், வெஜ்... பிரியாணியில் எது ஹெல்த்தி?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் என் கணவர், மகன்கள் என எல்லோரும் பிரியாணி பிரியர்கள். வாரத்தில் இரண்டு நாள்களுக்காவதுபிரியாணி வேண்டும் அவர்களுக்கு. பெரும்பாலும் மட்டன் பிரியாணிதான்கேட்கிறார்கள். உண்மைய... மேலும் பார்க்க

Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி - யார்?

பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது .யார் இந்த நிதி தி... மேலும் பார்க்க

``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்'' -அமைச்சர் ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு - மக்கள் தொகை: புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தொகு... மேலும் பார்க்க