செய்திகள் :

Heart: `லேசர் தொழில்நுட்பம் மூலம் இதய அடைப்புகளை நீக்கலாம்' - புதிய கண்டுபிடிப்பு!

post image

இந்தியாவிலேயே முதல்முறையாக நாக்பூரில் ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பினை நீக்குவதற்காக புதிய வகை தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு லேசர் சிகிச்சை என பெயரிட்டுள்ளனர். இதன் மூலமாக அதிக வலிமை கொண்ட வெளிச்சத்தினை கேத்திட்டர் மூலமாக ரத்தக்குழாய்க்குள் செலுத்தி, அங்கு உள்ள அடைப்புகளை ரத்த குழாய்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு நீக்க முடியும்.

இதயம்
இதயம்

பொதுவாக இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு குறிப்பாக ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு ஸ்டண்ட் அல்லது ஆஞ்சியோ பிளாஸ்டிக் மூலமாக சிகிச்சை மேற்கொள்வர். அவற்றிற்கு மாற்றுவழியாகவே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லேசர் தொழில்நுட்ப சிகிச்சை என்பது ஒருவகை அறுவை சிகிச்சையாகும். இதன் மூலம் சக்தி வாய்ந்த லேசரினை வைத்து ரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை ஆவியாக மாற்றி அவற்றை நீக்கிவிடுவார்கள். இதுவரை 55 நோயாளிகளுக்கு இந்த முறை அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இவ்வாறு லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் நோயாளிகளுக்கு பெரும்பாலும் ஸ்டண்ட் வைக்க வேண்டிய தேவை இருக்காது. மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டண்ட் வைக்கவேண்டிய தேவையிருந்தால் அவர்களுக்கு பலூனை ரத்தக்குழாய்களில் அனுப்பி அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் ஸ்டண்டினை சரியான இடத்தில் வைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. ஒருசில நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்த பிறகு ரத்தக்குழாயின் அளவு குறைந்து காணப்படும். இதனால், ரத்த ஓட்டம் குறைந்து உயிர் பிரிவதற்குகூட அதிக வாய்ப்புள்ளது. இவற்றிற்கு மாற்றுவழியாகவே லேசர் சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லேசர் சிகிச்சை
லேசர் சிகிச்சை

இந்த லேசர் தெரபி மிகவும் எளிமையாகவும் பயனுள்ள வகையிலும் துல்லியமாகவும் செயல்படுகிறது. மேலும், இவை நோயாளிக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கினை குறைத்து உடல் விரைவில் சீராக செயல்பட உதவுகிறது. இதனால், இவை நீண்ட காலங்களுக்கு பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆஞ்சியோ பிளாஸ்டி செய்வதன் மூலமாக உடலில் உள்ள ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னையும் கண்டறியலாம். மேலும், எந்தப்பகுதியில் அடைப்பை ஏற்பட்டுள்ளது என்பதை துல்லியமாக அடையாளம் கண்டு சிகிச்சை செய்யவும் மிகவும் உதவுகிறது எனவும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

பொதுவாக அதிகம் எண்ணெய் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடும். இவற்றினை பிளேக் என குறிப்பிடுவர். இவை ரத்தக்குழாய்களில் படிய தொடங்கினால் காலப்போக்கில் அதிகமாக படிந்து ரத்தக்குழாயின் இருபக்கமும் மலைபோல காட்சியளிக்கும். இதனால், இதயத்திற்கும் உடல்பாகங்களுக்கும் செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவும் சத்துக்களின் அளவு குறைந்து நெஞ்சுவலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவற்றை சரிசெய்ய அந்த அடைப்பினை நீக்குவது மிக அவசியம்.

அதற்காக மருத்துவர்கள் ஒரு மெல்லிய ஒயர் போன்ற அமைப்பினை உள்ளே அனுப்புவர். அல்லது இடுப்புப்பகுதியில் சிறிதாக கிழித்து அதன் உள்ளே லேசரினை அனுப்புவர். அவை அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியினை சென்றடைந்த பிறகு லேசர் மூலமாக அந்த அடைப்பினை அகற்றுவதற்கு உதவும். இதனால் ரத்தக்குழாய்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது. பிறகு அந்த லேசரினை அகற்றி வெளியேற்றுவர். அந்த இடத்தினை தையல் போட்டு மூடிவிடுவர். இது மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த முறையில் சிகிச்சை செய்தால், நோயாளிகள் விரைவில் குணமடைவதால் அவர்கள் மருத்துவமனையில் அதிக காலம் இருக்க வேண்டிய தேவை குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

தேனீயை விழுங்கினால் மாரடைப்பு ஏற்படுமா? - மருத்துவர் சொல்வதென்ன?

பிரபல பாலிவுட் நடிகையான கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர். பிரபல தொழிலதிபரான இவர் சில வாரங்களுக்கு முன்னால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற போலோ விளையா... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீண்ட நாள்களாகத் தொடரும் மலச்சிக்கல்.. மூலநோயாக மாறுமா, தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. சமீப காலமாக மூலநோய் அறிகுறி போலவும் உணர்கிறேன். நீண்டநாள்மலச்சிக்கல் பிரச்னையானதுபிற்காலத்தில் மூலநோயாக மாறும் என்கிறார்கள் ... மேலும் பார்க்க

Oral Health: நாக்கில் வெள்ளை நிற மாவுப்படலம்.. தீர்வு என்ன?

சிலருக்கு நாக்கின் மீது மாவு போன்ற வெண்படலம், புள்ளிகள் ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல், தினமும் காலை பல் தேய்த்து முடித்தவுடன், டங் கிளீனரைக்கொண்டு அழுத்தித் தேய்ப்பார்கள். இதனால், ந... மேலும் பார்க்க

"திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" - கோவிஷீல்டு நிறுவனம்

கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும், உயிரிழந்தவர்களில் பாதிபேர் 20 முதல் 40 வயதுடையவர்கள்.... மேலும் பார்க்க

Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?

''புத்தம்புதிய, பசுமையான பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள் மற்றும் முளைவிட்ட பயறுகளை ‘உயிர் உள்ள உணவுகள்’ (live foods) என்று கூறுகிறோம். ஏனெனில், அவை சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன. மனிதனின் ஆ... மேலும் பார்க்க

Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?

Doctor Vikatan: குளிப்பதில் எது சரியான முறை? சிலர் காக்கா குளியல் குளித்துவிட்டு வருவதைப்பார்க்கிறோம். இன்னும் சிலர் மணிக்கணக்காக ஊறி, தேய்த்துக் குளிப்பதைப் பார்க்கிறோம்.நீண்டநேரம்தண்ணீரில் ஊறிக்குளி... மேலும் பார்க்க