செய்திகள் :

India - Pakistan Conflict: 'இன்னும் ஏன் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை?' - விளக்கம் சசி தரூர்

post image

பாகிஸ்தானும் சீனாவும் கூட்டாளிகள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்றத்தில் சீனா பெரிதாக மூக்கை நுழைக்கவில்லை. 'போர் வேண்டாம்... பதற்ற நிலை வேண்டாம்' என்று சொல்வதோடு மட்டும் நின்றுகொண்டது.

'ஏன் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா களமிறங்கவில்லை?' என்பதை விளக்குகிறார் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர்.

"ஆச்சரியமாக, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைபாட்டை சீனா எடுக்கவில்லை. இந்தப் போர் குறித்த சீனாவின் அறிக்கைகள், 'இந்தியா - சீனா உறவு மேம்பட்டு வருவதை சீனா உணர்ந்திருக்கிறது' என்பதை காட்டுகின்றன.

இந்தியா, சீனா, பாகிஸ்தான்
இந்தியா, சீனா, பாகிஸ்தான்

சீனா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக அளவிலான வரி விதித்துள்ளார். அதனால், சீனாவுக்கு இந்திய சந்தை மிகவும் முக்கியம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய சந்தையின் தேவை தற்போது சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது.

முன்பு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்திருந்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா நின்றிருக்கும். ஆனால், இப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாக உள்ள போரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என்பது என்னுடைய கருத்து" என்று பேசியுள்ளார்.

NCP : `அஜித் பவார் - சுப்ரியா சுலே முடிவு செய்வார்கள்’ - அணிகள் இணைவதில் இறங்கி வந்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் கட்சியை இரண்டாக உடைத்ததோடு, பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் இருப்பதாக கூறி கட்சியையும், சின... மேலும் பார்க்க

முடக்கப்பட்ட 'The Wire' இணையதள பக்கம் - செய்தி நிறுவனம் சொல்வதென்ன?

'The Wire' இணையதளம் மத்திய அரசால் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்கள் அறிவித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது..."அன்பிற்குரிய 'தி வயர்' வாசகர்களுக்கு,இந்திய அர... மேலும் பார்க்க

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி - போர் பதட்டமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க

"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா. 'இதற... மேலும் பார்க்க

India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிர... மேலும் பார்க்க

'போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது'- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “பஹல்காமில் தாக்குதலுக்குள்ளானவர்களை மீட்பதிலும் பாது... மேலும் பார்க்க