செய்திகள் :

Japan: வேண்டுமென்றே தவறு செய்து, மீண்டும் மீண்டும் ஜெயிலுக்கு போகும் முதியவர்கள்! - பின்னணி என்ன?

post image
ஜப்பானில் வசிக்கும் வயதானவர்கள் வேண்டுமென்றே குற்றங்களைச் செய்துவிட்டு சிறைகளில் வாழ்வதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜப்பானில் டோக்கியோவிற்கு வடக்கே பெண்களுக்கு என்று மிகப்பெரிய சிறை ஒன்று உள்ளது. அந்த சிறையில் சுமார் 500 கைதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்களாக உள்ளனர். இதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்ள அங்குள்ள பெண் கைதிகளிடம் விசாரிக்கப்பட்டிருக்கிறது. அப்போது சிறையில் இருக்கும் அவர்கள் கூறியதாவது, “நாங்கள் பொருளாதாரரீதியாக நல்ல நிலைமையில் வாழ முடியவில்லை.

முதியவர்
முதியவர்
குறிப்பாக, பிள்ளைகளால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறோம். உணவும் கிடைப்பதில்லை. உடல் நலத்திலும் அக்கறை கொள்வதில்லை. இதன்காரணமாகவே ஏதாவது ஒரு தவறைச் செய்துவிட்டு சிறைக்கு வந்துவிடுகிறோம். இங்கு எங்களை நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கின்றனர்.
முதியவர்
முதியவர்

கடந்த ஆண்டு அரசாங்கத் தரவுகளின்படி, ஜப்பானில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 36.25 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில், 20.53 மில்லியன் பெண்களும், 15.72 மில்லியன் ஆண்களும் உள்ளனர். ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை தற்போது 29.3 சதவீதமாக உள்ளது. இது, கடந்தகாலங்களைவிட உயர்வாகும்” என்பது குறிப்பிடத்தக்கது.

வழுக்கை தலையுடன் திருமணம் செய்த மணப்பெண்... இணையவாசிகளை கவர்ந்த Emotional Video!

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களை செய்வார்கள். அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கு... மேலும் பார்க்க

`உப்புமாவுக்கு பதில் பிரியாணி தரணும்'- சிறுவனின் கோரிக்கையும் கேரள அரசின் பதிலும்

அங்கன்வாடியில் உப்புமாவிற்கு பதில் பிரியாணியும் சிக்கனும் வழங்க வேண்டும் என்று கேட்கும் குழந்தையின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அதை கேரளா அரசு பரிசீலனை செய்வதாகத் தெரிவித்திருக்கிறது.கேரளாவில் அங்கன்... மேலும் பார்க்க

Divorce Temple: திருமண உறவை முறித்து கொள்ள தம்பதிகள் செல்லும் `விவாகரத்து கோயில்'- எங்கே இருக்கிறது?

கோயிலுக்குச் சென்றால் திருமணம் நடக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு ஒரு கோயிலுக்குச் சென்றால் விவாகரத்து நடக்குமாம். ஜப்பானில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு "விவாகரத்து கோயில்" என்று பெயர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் துறவறம் பூண்ட நடிகை மம்தா குல்கர்னி அகாரா மடத்தில் இருந்து நீக்கம்..! பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு வெளிநாட்டில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பிறகு உத்தரப்பிரதேசத்தில் நடந்து வர... மேலும் பார்க்க

உலகிலேயே முதன்முறையாக `குடித்துவிட்டு ட்ரோன் இயக்கிதற்காக ரூ.2.5 லட்சம் அபராதம்' - எங்கே?

குடித்துவிட்டு கார், பைக் என எந்த வாகனத்தையும் ஓட்டி ஃபைன் கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஸ்வீடனில் ஒரு குடிமகன் குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்காக அபராதம் கட்டியுள்ளார், அதுவும் 2,52,194 ரூப... மேலும் பார்க்க

China: ``எவ்வளவு வேண்டுமோ அள்ளிக்கொள்ளுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை'' -70 கோடி போனஸ் வழங்கிய நிறுவனம்!

சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆண்டு முடிவு போனஸாக அதன் ஊழியர்களுக்கு 70 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனையுடன்.ஊழியர்கள் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்களால் எவ்வளவு பணத்தை எண்ண முடியு... மேலும் பார்க்க