செய்திகள் :

Kalpana Nayak: ``கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை'' -டிஜிபி விளக்கம்

post image

கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை (USRB) கல்பனா நாயக் அடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கல்பனா நாயக், "என் அறையை சென்று பார்த்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சற்று விரைவாக என் அறைக்கு நான் சென்றிருந்தால், நான் உயிரிழந்திருப்பேன். முறைகேடுகள் குறித்து நான் வெளிப்படுத்திய சில நாள்களில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது" என்று புகார் தெரிவித்திருந்தார்.

ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக்

இந்த தீ விபத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் வந்த கொலை முயற்சியாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறைத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காவல்துறையின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பெண் ஏடிஜிபியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதும், அவருக்கு நடந்த தீ விபத்து சம்பவத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும்தான் இப்போது அரசியல் சர்ச்சைகள் வெடிப்பதற்குக் காரணமாகியிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அண்ணாமலை உள்ளிட்டோர், 'பெண் ஏடிஜிபி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்' என்று வலியிறுத்தி, தி.மு.க அரசைக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கல்பானா நாயக் புகார் குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம்.

இன்று (பிப் 3) இந்த சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக நிலையில், டிஜிபி அலுவலகம், "14.8.2024ஆம் தேதி அன்று கல்பனா ஐபிஎஸ் இடமிருந்து புகார் கடிதம் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் உடனே அந்த தீ விபத்து சம்பவம் குறித்து முழு தீவிரத்துடன் விசாரணை நடத்தப்பட்டது. கூடுதல் டிஜிபி கல்பானா நாயக் உயிருக்கு எந்தவித அச்சறுத்தலும், ஆபத்தும் இல்லை. அவரது அறையில் ஏற்பட்ட தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டிருப்பதும், மின்கசிவு ஏற்பட்ட காப்பர் மின்கம்பியின் தடையங்களே அங்கு இருந்ததும் தெரியவந்தது. அந்த தீ விபத்தை யாரேனும் ஏற்படுத்தியதற்கான முகாந்திரங்கள் ஏதுமில்லை. வேண்டுமென்றே தீ விபத்தை ஏற்படுத்திய செயல் ஏதும் அந்த விபத்தில் இல்லை" என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறது. சீரூடை பணியாளர் சீருடை பணியாளர் தேர்வாணையமும், "ஏடிஜிபி கல்பானா நாயக் புகாரில் உண்மையில்லை" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Seeman: "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை அண்ணா" -சீமான்

சீமானும் தொடர்ச்சியாக தந்தை பெரியார் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது சர்ச்சைகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கிறது.பெரியார் பற்றிய கடுமையான விமர்சனங்களுக்கு உரிய ஆதாரங்களை சீமான் காட்ட வேண்டு... மேலும் பார்க்க

``SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி" -தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து இன்று (பிப் 3) வெளியாகியிருக்கும் அரசின் அறிவிப்பி... மேலும் பார்க்க

Kalpana Nayak: தேர்வாணைய முறைகேடு, கொலை முயற்சி?! - புகாரின் பின்னணி என்ன?

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியது இன்று பரபரப்பான பேசுபொருளாகியிருக்கிறது. இந்தப் ப... மேலும் பார்க்க

ECR: "அவர்தான் காரிலும் திமுக கொடியைக் கட்டியுள்ளார்..." - காவல் துணை ஆணையர் விளக்கம்

சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் வந்த பெண்களை, மற்றொரு காரில் துரத்தி, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து அராஜகத்தில் ஈடுபடும் காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.பெண்களைத்... மேலும் பார்க்க

TVK Vijay: "மத்திய பட்ஜெட்டில் மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்; ஏழை மக்களுக்கு அநீதி" - விஜய்

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப் 1) தாக்கல் செய்திருக்கிறார்.இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அ... மேலும் பார்க்க

Union Budget 2025 : பட்ஜெட்டில் இடம்பெறாத `தங்கம்' குறித்த அறிவிப்பு.. இன்று சந்தையில் விளைவு என்ன?

உலக அளவில் பொருளாதார மந்த நிலை, போர் பதற்றம், உலக நாடுகள் தங்கம் வாங்கிக் குவிப்பது போன்ற காரணங்களால்... தங்கம் விலை ஏற்கெனவே தாறுமாறாக உயர்ந்துகொண்டிருந்தது. இன்று வெளியாகும் மத்திய பட்ஜெட்டில் தங்கம... மேலும் பார்க்க