செய்திகள் :

Kantara Chapter 1: "மழை, காற்று, பயம்..." - நீந்திப் பிழைத்த படக்குழு; அனுமதியில்லாமல் படப்பிடிப்பா?

post image

கன்னட படமான காந்தாரா: சேப்டர்1 படப்பிடிப்பின்போது தொடர்ந்து புதுப்புது சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே இப்படப்பிடிப்பின் போது கடந்த ஒரு மாதத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மேலும் ஒரு சம்பவமாக இப்படப்பிடிப்பு கர்நாடகா அணைப்பகுதியில் நடந்தபோது படகு கவிழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமோகா மாவட்டத்தில் இருக்கும் மாணி அணைப்பகுதியில் காந்தாரா படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

ரிஷப் ஷெட்டி | Rishab Shetty
ரிஷப் ஷெட்டி | Rishab Shetty

இதில் நடிகர் ரிஷப் ஷெட்டி உட்பட நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் என 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆற்றில் படகில் சென்று கொண்டிருந்தபோது கடுமையான காற்று வீசியதால் படகு கவிழ்ந்தது. இதனால் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் நீரில் தத்தளித்தனர்.

அதிர்ஷ்டவசமாகப் படகு கவிழ்ந்த இடத்தில் நீரின் ஆழம் சற்று குறைவாக இருந்தது. இதனால் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் நீச்சல் அடித்தபடி கரைக்கு வந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர்.

இந்தச் சம்பவத்தில் படப்பிடிப்பு குழுவினர் வைத்திருந்த கேமரா மற்றும் இதர உபரகணங்கள் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. இதனால் படத்தயாரிப்பு குழுவிற்குப் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் படப்பிடிப்பில் பங்கேற்ற ஊழியர் ஒருவர் கூறுகையில், ''படகில் ஏறி அணையில் சென்றபோது படப்பிடிப்பு குழுவினர் மிகவும் பயத்திலிருந்தனர். அந்நேரம் மழை பெய்து கொண்டிருந்தது. அளவுக்கு அதிகமான காற்று வீசியதால் படகு மிகவும் ஆடியது. காற்றின் வேகத்தால் திடீரென படகு தண்ணீரில் கழிந்துவிட்டது.

Kantara Movie | காந்தாரா படம்
Kantara Movie | காந்தாரா படம்

அதிர்ஷ்டவசமாகப் படகு தண்ணீர் ஆழம் குறைவான பகுதியில் கவிழ்ந்ததால் உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்தால் அனைவரும் மிகவும் பயத்தில் இருக்கிறோம். தண்ணீருக்குள் விழுந்த கேமரா போன்றவற்றை இன்னும் எடுக்கவில்லை'' என்றார்.

இது குறித்துக் கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். அணையில் படகு ஒன்றைக் கப்பல் போன்று வடிவமைத்து இருந்தனர்.

அந்தக் கப்பலில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அளவுக்கு அதிகமான காற்று மற்றும் மழையால் படகு கவிழ்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு பொதுவாக யாரையும் அனுமதிப்பதில்லை. காந்தாரா படப்பிடிப்பும் மிகவும் ரகசியமாகத்தான் நடந்தது. அதோடு ஆழமில்லாத தண்ணீரில் படப்பிடிப்புக்காக மிகப்பெரிய ஷெட் போடப்பட்டு இருந்ததாகப் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பல சவால்கள் வந்து கொண்டிருந்தபோதிலும் படப்பிடிப்பை முடித்துவிடவேண்டும் என்பதில் படத்தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அதேசமயம் அணைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த போதிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தயாரிப்பு குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிஷோர் | ரிஷப் ஷெட்டி
கிஷோர் | ரிஷப் ஷெட்டி

ஆனால் போதிய அனுமதி பெற்றே படப்பிடிப்பை நடத்தியதாகப் படத்தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. அதோடு படகு விபத்தில் தயாரிப்பு உபகரணங்கள் எதுவும் தண்ணீரில் விழவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படகு விபத்துக்குப் பிறகும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். 2022ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து இப்போது காந்தாரா: சேப்டர் 1 படம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக தட்ஷன கன்னட பகுதியில் படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். அதையும் மீறி காந்தாரா படக்குழுவினர் படப்பிடிப்புக்குச் சென்றுள்ளனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

MV Won Hai 503: 8 நாள்களாக எரியும் தீ; ஆழ்கடலில் விடப்பட்ட கப்பல்; கேரள கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை துறைமுகம் நோக்கிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பல் கடந்த 9-ம் தேதி தீப்பிடித்து எரிந்தது.கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கால் மீன்பிடி... மேலும் பார்க்க

Ahmedabad plane crash: ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - சாவின் விளிம்புவரை சென்று உயிர் தப்பிய 7 பேர்

அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இக்கொடூரமான விபத்தில் 7 பேர் கடைசி நேரத்தில் தங்களது பயணத்தை ரத்து செய்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். தாய் வைத்த அன்பு கோரிக்கை... மேலும் பார்க்க

DNA மூலம் அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்; 6-ம் தேதிக்கு பதில் 12-ம் தேதி பயணித்து இறந்த தம்பதி!

அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் குஜராத் மாநிலம், ஆனந்த் நகரை சேர்ந்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனந்த் நகர் வெளிநாட்டு வாழ் இந்தியர்... மேலும் பார்க்க

புனே: 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விபத்து; ஆற்று வெள்ளத்தில் பலர் மூழ்கிய சோகம்..

மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ளது குண்டமாலா கிராமம். இந்தக் கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 - 15 பேர் வெள்ளத்தில் அட... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: Boeing 787 குறித்து குற்றம்சாட்டிய அமெரிக்க செனட்டர்... வைரலாகும் வீடியோ!

"பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில்லை; ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது; ஊழியர்களுக்கு அதிக வேலைகளை தருவது என எப்படி எல்லாம் முடியுமோ, அப்படி எல்லாம் நீங்கள் போயிங் மூலம் லாபத்தை சம்பாதிக்கிறீர்கள்... மேலும் பார்க்க

துபாய்: தீப்பிடித்த 67 மாடி கட்டடம்; 'ஜீரோ' காயம், உயிரிழப்புகள் - தீயணைப்பு துறையின் துரிதம்!

துபாயில் இருக்கும் 67 மாடி குடியிருப்பு 'மெரினா பினாக்கில்'. இந்தக் குடியிருப்பிற்கு 'டைகர் டவர்' என்று இன்னொரு பெயரும் உண்டு. 767 அப்பார்ட்மென்டுகள் இருக்கும் இந்தக் குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க