செய்திகள் :

Kerala: ``நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்..'' - SFI பேனரால் ஆவேசமான கேரள கவர்னர்

post image

கேரள மாநிலத்தில் இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், ஆளும் சி.பி.எம் அரசும் இணக்கமாக உள்ளது. கடந்த வாரத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, கேரள கவர்னர் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் சேர்ந்து சென்று சந்தித்து மாநிலத்துக்கு நிதிகேட்ட ஆச்சர்ய நிகழ்வு நடந்தது.

இந்த நிலையில் காலிகட் (கோழிக்கோடு) பல்கலை கழகத்தின் செனட் கூட்டத்தில் கலந்துகொள்ள பல்கலைகழக வேந்தரான கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்றார்.

கோழிக்கோடு பல்கலைகழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்

அப்போது பல்கலைகழக வளாகத்தில் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ சார்பில் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில், 'எங்களுக்கு சான்சிலர்தான் (வேந்தர்) வேண்டும் சாவர்க்கர் அல்ல' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இது கவர்னருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பல்கலைகழக கூட்டத்தில் பேசிய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், "இந்த பல்கலை கழகத்துக்குள் வந்ததும் ஒரு பேனரை பார்த்தேன். எங்களுக்கு சான்சிலர்தான் வேண்டும் சாவர்க்கர் அல்ல என அதில் குறிப்பிட்டிருந்தனர். என்ன சிந்தனை இது? சாவர்கர் என்று தேச விரோதி ஆனார்.

சாவர்க்கர் என்ன செய்தார். சரியாக படித்தால் அவரைப்பற்றிய விஷயங்கள் புரியும். தேசத்துக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்.

பிறரின் நன்மைக்காகத்தான் சாவர்க்கர் செயல்பட்டார். வீட்டைப்பற்றியோ, வீட்டில் உள்ளவர்களைப்பற்றியோ, குடும்பத்தைப்பற்றியோ அவர் சிந்திக்கவில்லை. மாறாக இந்த சமூகத்தைப்பற்றிதான் அவர் எப்போதும் சிந்தித்தார்.

நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர். இப்பட்டிப்பட்ட பேனர்கள் பல்கலைகழக வளாகத்தில் வருகின்றன என்பதை துணை வேந்தர் கவனத்தில் கொள்ளவேண்டும்" என்றார்.

கோழிக்கோடு பல்கலைகழகத்தில் கேரள கவர்னர்

இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கும் கேரள அரசுக்கும் நல்ல இணக்கம் உள்ளது.

முந்தைய கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும் அரசுக்கும் பல்கலைகழக நியமனங்கள் சம்பந்தமாக பிரச்னை இருந்துவந்தது. இதையடுத்து எஸ்.எஃப்.ஐ மாணவர் அமைப்பினர் ஆரிப் முகம்மதுகானுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினார். அந்த சமயத்தில் வைக்கப்பட்ட பேனர் அது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் முன்னிலையில் அந்த பேனர் அகற்றப்பட்டது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`பாரதியார் இல்லத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம்’ - ஆட்சியர் அறிவிப்பு; காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவு... மேலும் பார்க்க

RTI: உள்ளே நுழையும் DPDP act பிரிவு 44 (3); பறிபோகும் ஆர்.டி. ஐ உரிமை... பிரச்னை என்ன? | Explainer

`மத்திய பட்ஜெட் - 2025' மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, வக்பு வாரிய விவகாரம் போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பி வர... மேலும் பார்க்க

"அன்று இபிஎஸ் சொன்ன வார்த்தை; அவராகவே பதவி விலகுவதுதான் மரியாதை" - ஓ.பி.எஸ் பதிலடி

தூத்துக்குடியில் இன்று (மார்ச் 27) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, " 'அ.தி.மு.க'வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்ல... மேலும் பார்க்க

மீனவர்கள் 11 பேர் கைது; இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் தொடரும் சிறைபிடிப்பு!

பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான மன்னார் வளைகுடா கடல் பரப்பில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது பல ஆண... மேலும் பார்க்க

Ilaiyaraaja: `இளையராஜாவுக்கு பாராட்டு விழா' - தேதியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

லண்டனில் கடந்த மாதம் மார்ச் 8-ம் தேதி 'சிம்பொனி 01 'Valiant'' சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்திருந்தார்.லண்டனுக்குச் செல்லும் முன், இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிரா... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி; மீண்டும் ஓபிஎஸ்..? - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாதுஎன்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல்... மேலும் பார்க்க