செய்திகள் :

MAHER: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் சுகாதாரத் திட்டங்கள் தொடக்கம்

post image
MAHER: சமூக மேம்பாட்டிற்காக மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி சுகாதாரத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

உயர்கல்வியில் முன்னோடியாக இருக்க பாடுபடும் பல்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகமான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி (MAHER), கடந்த 20 ஆண்டுகளாக தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு மகத்தான சேவையை வழங்கி வருகிறது. சமூகத்தின் ஓதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவுகளின் நலனுக்காக பல்வேறு சுகாதாரத் திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் சமூக மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை நேற்றைய தினம்(ஜனவரி 31, 2025)இந்த நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியது.

MAHER

நிறுவனத்தின் வேந்தர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன், மீனாட்சி மகப்பேறு திட்டம் - 2025 (MMS), மீனாட்சி மேம்பட்ட கதிரியக்க நோய் கண்டறிதல் திட்டம் - 2025 (MARS) மற்றும் மீனாட்சி அவசரகால அதிர்ச்சி சிகிச்சை திட்டம் - 2025 (METS) ஆகிய மூன்று சுகாதார நலத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். MAHER-ன் முதன்மை நிறுவனமான காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (MMCHRI) இதன் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் MAHER-ன் வேந்தர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன், இனணவேந்தர் ஆகாஷ் பிரபாகர், நிறுவனத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் சி. ஸ்ரீதர், சார்பு துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் சி. கிருத்திகா, பதிவாளர் பேராசிரியர் டாக்டர் சுரேகா வரலட்சுமி வி, MMCHRI-ன் டீன் பேராசிரியர் டாக்டர் கே.வி. ராஜசேகர் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கே. பூபதி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

MAHER

மீனாட்சி மகப்பேறு திட்டம் 2025, பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைத்தல் மற்றும் நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவித்தல் என்ற லட்சிய இலக்கோடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகளான ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட விசாரணைகள், பிரசவத்திற்கு முந்தையை ஸ்கேன்களான அனோமாலி ஸ்கேன், என்டி ஸ்கேன், இதய பரிசோதனை, மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது உணவு மற்றும் பொது வார்டில் சேர்க்கை ஆகியவற்றை முற்றிலும் இலவசமாகப் பெறலாம்.

இந்தத் திட்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால், சாதாரண பிரசவங்கள் இலவசமாக நடத்தப்படும், அதே நேரத்தில் சிசேரியன் மூலம் பிரசவம் அடையும் தாய்மார்கள் நுகர்பொருட்களின் விலையை மட்டும் ஏற்க வேண்டும்.

மேலும் கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வழங்கப்படும் அனைத்து மருந்துகளும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசியும் இலவசமாக வழங்கப்படும். இந்த நிறுவனம் மூன்றாவது மூன்று மாதங்களில் ரூ.2000 நிதியுதவியையும், பிரசவத்திற்குப் பிறகு ரூ.10,000 நிதியுதவியையும் அறிவித்துள்ளது. மேலும், ரூ.2000 மதிப்புள்ள குழந்தைகளுக்கான பரிசுப் பொட்டலத்தையும் வழங்குகிறது.

மீனாட்சி மேம்பட்ட கதிரியக்க நோய்கண்டறிதல் திட்டம் 2025, மலிவு விலையில் மேம்பட்ட ஆய்வுகளை வழங்குகிறது, இது மருத்துவ ரீதியாக ஏழை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மூளை, முதுகெலும்பு மற்றும் மூட்டுகளின் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகளுக்கு ரூ.2000 செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மிகக் குறைந்த விலையாகும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து சிடி ஸ்கேன்களுக்கும் ரூ.750 முதல் ரூ.1250 வரை மானிய விலையில் கட்டணம் வசூலிக்கப்படும்.

MAHER

சாலை விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக மீனாட்சி அவசரகால அதிர்ச்சி சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காயம் உள்ள நோயாளிகள் இந்த திட்டத்தின் கீழ் முதலுதவி மற்றும் எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் போன்ற விசாரணைகள் உள்ளிட்டவற்றை இலவசமாகப் பெறலாம். காயங்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கான தியேட்டர் கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதுகுறித்து வேந்தர் தனது உரையில், "நிர்வாகத்தின் இந்த உன்னத முயற்சியை முழு மனதுடன் வரவேற்கிறேன். மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர்கள் குழுவிற்கு இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வாழ்த்துக்கள். அவை வழங்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டங்கள் வேகம் பெற்று, மிகுந்த ஆதரவைப் பெறும் என்பது உறுதி" எனத் தெரிவித்தார்.

`Right to Die With Dignity' - முதல் மாநிலமாக உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் கர்நாடகா!

குணப்படுத்த முடியாத, உயிர் காக்கும் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் "கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை" அனுமதிக்கும் வகையில், கர்நாடக அரசு ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட... மேலும் பார்க்க

Pregnancy: `கருவுக்குள் கரு' - 5 லட்சம் கருக்களில் ஒன்றுக்கு ஏற்படும் அரியவகை; என்ன சிகிச்சை?

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 32 வயது கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவின் உள்ளே மற்றொரு கரு இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகில் மிக மிக அரிதான ஒன்றாகப் பார்... மேலும் பார்க்க

Apollo: வானகரத்தில் தனது 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் சென்னை மாநகரில் அதன் 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை பெருமிதத்துடன் இன்று தொடங்கி வைத்திருக்கிறது.வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த முழுமையான புற்றுநோய் சிகிச்சை மையம், தமிழ்நாட... மேலும் பார்க்க

Health: வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா?

வெளிநாட்டுப்பழங்கள் அதிகமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசி... மேலும் பார்க்க

குன்னூர்: மஞ்சள் காமாலை பதற்றத்தில் உலிக்கல் பேரூராட்சி மக்கள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது உலிக்கல் பேரூராட்சி. 17 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சி பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு குறு வணிகர்கள் அதிகமுள்ள பகுதியாக இருக்கிற... மேலும் பார்க்க

Health: பனிக்காலமும் பனிக்காற்றும்... யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்? - மருத்துவர் விளக்கம்!

காலையில் வானம் சில நாள் சிறு தூறல் போடுகிறது. கூடவே குளிரும் தாங்க முடியவில்லை. இந்தப் பனிக்காலம் சளி, இருமல், காய்ச்சல் என்று அனைத்து வயதினரையும் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வயதானவர்... மேலும் பார்க்க