செய்திகள் :

Manipur: `மணிப்பூரில் மீண்டும் அரசமைக்கத் தயார்...' - பாஜக தலைவர் கூறுவதென்ன?!

post image

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அரசமைக்க 44 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக பாஜக எம்.எல்.ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங் தெரிவித்துள்ளார்.

இன்று 9 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ராஜ் பவன் சென்ற தோக்சோம் ராதேஷ்யாம் சிங், ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் மக்கள்!

பாஜக எம்.எல்.ஏ கூறியதென்ன?

அரசமைப்பது பற்றி பேசிய தோக்சோம் ராதேஷ்யாம் சிங், "மக்கள் விருப்பப்படி ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ-க்கள் தயாராக இருக்கிறோம்.

இதனை ஆளுநரிடம் தெரியப்படுத்தியிருக்கிறோம். அத்துடன் இப்போது நிலவிவரும் பிரச்னைகளுக்குச் சாத்தியமான தீர்வுகள் பற்றி விவாதித்திருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தோக்சோம் ராதேஷ்யாம் சிங் மற்றும் மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் ஆட்சியமைக்கத் தயாராக இருந்தாலும், உரிமை கோருவது பற்றிய இறுதி முடிவை பாஜக மத்திய தலைமைதான் எடுக்கும் எனக் கூறியுள்ளார்.

பிரேன் சிங்

அத்துடன் சபாநாயகர் சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துள்ளார் என்றும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் வலியுறுத்திப் பேசியுள்ளார்.

Manipur சட்டமன்றத்தின் நிலை என்ன?

மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பிரேன் சிங், கடந்த பிப்ரவரி அன்று ராஜினாமா செய்ததையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது.

மணிப்பூர் சட்டமன்றத்தில் உள்ள 60 இடங்களில் 59 இடங்கள் நிறைந்துள்ளன. ஒரு எம்.எல்.ஏ மறைந்ததால் ஒரு தொகுதியில் வெற்றிடம் உள்ளது.

அரசாங்கம் அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படும் 44 எம்.எல்.ஏ-க்களில் 32 மெய்தி எம்.எல்.ஏக்கள், 3 இஸ்லாமிய எம்.எல்.ஏக்கள் மற்றும் 9 நாகா எம்.எல்.ஏ-க்கள் அடங்குவர்.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே மெய்தி இனத்தவர்கள்.

60-ல் மீதமுள்ள 10 எம்.எல்.ஏ-க்களும் குக்கி இனத்தவர்கள். அவர்களில் 7 பேர் பாஜக (அரசமைக்க முன்வரவில்லை), 2 பேர் குக்கி மக்கள் கூட்டணி மற்றும் ஒருவர் சுயேட்சையில் வெற்றிபெற்றுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

United Nations: நிதி நெருக்கடி... `கிட்டத்தட்ட 7,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா ஐக்கிய நாடுகள் சபை?'

நிதி நெருக்கடி காரணமாக, $3.7 பில்லியன் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பேரை பணியிலிருந்து நீக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம். ஐக்கிய நாடுகள் சபையின் நிதியில்... மேலும் பார்க்க

பாமக: "என் அம்மா மேல் துரும்பைக் கூடப் படவிடமாட்டேன்; ஆனால் இப்போது..." - அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாகவே, நேரிடையாகவும், மறைமுகமாகவும் வார்த்தை மோதல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.இத்தகைய சூழலில், சோழிங்... மேலும் பார்க்க

'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் 'ஆயுஷ்மான் வயோ வந்தனா' திட்டம்.இதில் ஒரு கு... மேலும் பார்க்க

PMK: "எவ்வளவோ அபாண்டமான பழிகளைச் சுமந்திருக்கிறேன்" - நிர்வாகிகள் மத்தியின் அன்புமணி உருக்கம்

'அன்புமணி ஆலோசனை...'பனையூரில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி முடித்திருக்கிறார்.ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

DOGE-ல் இருந்து விலகிய மஸ்க்... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பில் விரிசலா; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

'அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?' என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது.'ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு ஆணை எவ்வளவு காதலிக்க முடியுமோ, அ... மேலும் பார்க்க