செய்திகள் :

OPS : 'அமித் ஷா எங்களை அழைக்காதது வருத்தமே!' - மனம் திறந்த ஓ.பி.எஸ்

post image

'ஓபிஎஸ் பத்திரிகையாளர் சந்திப்பு!'

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு ஓ.பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, 'அமித்ஷா சென்னை வந்தபோது எங்களை அழைத்து பேசாதது வருத்தமே.' என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

OPS
OPS

'NDA வில்தான் தொடர்கிறோம்!'

ஓ.பி.எஸ் பேசியதாவது, 'நாங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்துதான் சந்தித்தோம். இப்போதும் அதே கூட்டணியிலேயே நீடிக்கிறோம். யார் விரும்புகிறார்களோ இல்லையோ எங்களின் நிலைப்பாடு இதுதான். மாவட்டக் கழக நிர்வாகிகளை ஆலோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

அடுத்ததாக மாவட்டம் மாவட்டமாக தொண்டர்களை சந்திக்க உள்ளோம். மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைக்காதது வருத்தமே. அதிமுகவை ஜெயலலிதா உச்சாணிக் கொம்பில் வைத்துவிட்டு சென்றார். இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என தெரியும். ஆகவே பிரிந்திருக்கும் அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு

OPS
OPS

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் 9 கட்சிகளும் இணைந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். எடப்பாடியை தவிர NDA வில் இருக்கும் அத்தனை தலைவர்களும் என்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தபோதே நான் வாழ்த்தினேன். அவரின் அரசியலைப் பொறுத்தே அவர் எந்தத் திசையில் செல்கிறார் என சொல்ல முடியும். இதுவரை நல்ல திசையிலேயே செல்கிறார். அரசு நிர்வாகத்தில் திமுக தோல்வி அடைந்துவிட்டது.' என்றார்.

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள்- Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!* பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!* The Resistance Front - ஐ.நா-வில் இந்தியா முறையீடு?*... மேலும் பார்க்க

Turkey: 'நோ பர்மிஷன்' - பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

கடந்த மே 7 டு மே 10-ம் தேதி இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த பதற்ற நிலையில், பாகிஸ்தானுக்கு மிகுந்த ஆதரவை வழங்கியிருந்தது துருக்கி. இதற்கு பதிலடி தருவது போல, இந்தியாவில் உள்ள துருக்கி நிறுவனத்தின... மேலும் பார்க்க

`பிரதமர் மோடியின் போர் ராஜ தந்திரத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன!’ – புகழும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் பதவியேற்றதில் இருந்து, அரசு அனுப்பும் அனைத்து மக்கள் நலத்திட்டங... மேலும் பார்க்க

Trump: "இந்தியா - பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்..." - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பின், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இந்தியாவும் தாக்குதல் நடத்த... இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த ... மேலும் பார்க்க

`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!' - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஶ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது..."உங்களை (ராணுவ வீரர்கள்) காண்பதில் நான் பெருமை கொள்கிறேன். பிரதமர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் மது போதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை; வெளியேற்றப்பட்ட மருத்துவர்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற... மேலும் பார்க்க