செய்திகள் :

Pope: `போப் பிரான்சிஸின் தைரியமான குரலை நம் செவிகளில் வைத்திருப்போம்'- புதிய போப் ராபர்ட் ப்ரீவோஸ்ட்

post image

கத்தோலிக்க மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ம் தேதி இயற்கை எய்தினார்.

இவரது மறைவைத் தொடர்ந்து 'அடுத்த போப் யார்?' என்கிற ரகசிய வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.

முதல் நாள் வாக்கெடுப்பில் புதிய போப்பாக எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து நேற்றும் வாக்கெடுப்பு தொடர்ந்தது.

இதில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடையாளமாக வாடிகனிலுள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தின் சிம்னியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேற்றப்பட்டது.

New Pope - Robert Prevost
New Pope - Robert Prevost

இதன் பிறகு புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினான்காம் லியோ மக்கள் முன் தோன்றினார். பதினான்காம் லியோவின் இயற்பெயர் ராபர்ட் பிரிவோஸ்ட்.

புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மக்களிடம் அமைதியை வலியுறுத்தி பேசியிருக்கிறார் பதினான்காம் லியோ.

அவர் பேசுகையில், "அமைதி உண்டாகட்டும். அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! இது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் முதல் வாழ்த்து.

இந்த அமைதி வாழ்த்து உங்கள் இதயங்களைச் சென்றடையவும், உங்கள் குடும்பங்களையும், எங்கிருந்தாலும் எல்லா மக்களையும், எல்லா இனங்களையும், பூமி முழுவதையும் சென்றடைய வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

இந்த அமைதி நம்மை எல்லோரையும் எந்த வரம்புகளோ நிபந்தனைகளோ இல்லாமல் நேசிக்கும் தேவனிடமிருந்து வருகிறது.

New Pope - Robert Prevost
New Pope - Robert Prevost

போப்பரசர் பிரான்சிஸின் தைரியமான குரலை நம் செவிகளில் வைத்திருப்போம். அந்த ஆசீர்வாதத்தைத் தொடர அனுமதியுங்கள்.

தேவன் நம் எல்லோரையும் நேசிக்கிறார், தீமை வெற்றி பெறாது. நாம் அனைவரும் தேவனின் கரங்களில் இருக்கிறோம்.

பயமின்றி, ஒன்றுபட்டு, தேவனோடும் ஒருவரோடு ஒருவர் கை கோத்து, நாம் முன்னேறுவோம்.

நாம் கிறிஸ்துவின் சீடர்கள், கிறிஸ்து நமக்கு முன்னால் செல்கிறார். உலகத்திற்கு அவரது ஒளி தேவை. மனிதகுலத்திற்கு தேவனையும் அவரது அன்பையும் அடைய ஒரு பாலமாக அவர் தேவை.

பேதுருவின் வாரிசாக என்னைத் தேர்ந்தெடுத்து, ஒன்றுபட்ட திருச்சபையாக உங்களோடு சேர்ந்து அமைதியையும் நீதியையும் தேடி, இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையாக, பயமின்றி பணியாற்றும் என் கார்டினல் சகோதரர்களுக்கு நன்றி.

New Pope - Robert Prevost
New Pope - Robert Prevost

ரோம், இத்தாலி, உலகெங்கிலும் உள்ள சகோதர சகோதரிகளே, நாம் ஒரு சினோடல் திருச்சபையாக இருக்க விரும்புகிறோம், எப்போதும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி நடப்போம்.

நம் புனித தாய் மரியா எப்போதும் நம்மோடு நடக்க விரும்புகிறார், நம்முடன் அருகில் இருக்க விரும்புகிறார், தன் பரிந்துரையாலும் அன்பாலும் நமக்கு உதவ விரும்புகிறார்.

எனவே, இந்த மிஷனுக்காகவும், திருச்சபை முழுவதற்காகவும், உலகின் அமைதிக்காகவும் ஒன்றாக வேண்டுவோம்," எனப் பேசியிருக்கிறார்.

Pope : கார்டினலான ஒரே ஆண்டில் 'போப்'பாக தேர்வு; யார் இந்தப் புதிய போப் 14-ம் லியோ?

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, கத்தோலிக்க மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் காலமானார்.இவரது மறைவையடுத்து, 'அடுத்து போப் யார்?' என்கிற ரகசிய வாக்கெடுப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் வாக்கெடுப்ப... மேலும் பார்க்க

`நோய் தீரவில்லை..' - மதச் சடங்கை கடைப்பிடித்து உயிரிழந்த ஐ.டி தம்பதியின் 3 வயது மகள்

ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் சந்தாரா என்ற ஒரு மத சடங்கை கடைப்பிடிப்பது வழக்கம். வயதானவர்கள் இது போன்ற மதசடங்கை கடைப்பிடித்து எதுவும் சாப்பிடாமல் இருந்து உயிரை துறப்பது வழக்கம்.மத்திய பிரதேசத்தை சேர்ந்த... மேலும் பார்க்க

Pope Francis: போப் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு, குவியும் லட்சக்கணக்கான மக்கள்

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ்(88) உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மரணமடைந்தார்.போப் அவர்களின் உடல் ரோம... மேலும் பார்க்க

மும்பை: நீதிமன்ற உத்தரவுக்கு முன் ஜெயின் கோயிலை இடித்த மாநகராட்சி; மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பை விலே பார்லே பகுதியில் கடந்த வாரம் 35 ஆண்டு பழமையான ஜெயின் கோயிலை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.அதுவும் அக்கோயில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இல்லை. 90 ஆண்டு பழமையான பங்களாவிற்குள் இருந்த... மேலும் பார்க்க

Pope தேர்தல் எப்படி நடைபெறும்; தேர்வுசெய்யும் குழுவில் முதல் `தலித்' கார்டினல் யார் தெரியுமா?

நீண்ட நாள்களாக பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்ட போப்பாண்டவர் பிரான்சிஸ் காலமானார். இந்த நிலையில், சில நாள்களாகவே பேசப்பட்டு வந்த புதிய போப் யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது. கத்தோலிக்கத் திருச்சபையி... மேலும் பார்க்க