செய்திகள் :

`RAW' உளவு அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்; `ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றியவர்'

post image

இந்தியாவின் 'Secretary of the Research and Analysis Wing' என்றழைக்கப்படும் 'RAW' உளவு அமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் இந்த மாதம் ஜூலை 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து இதன் தலைவராக பராக் ஜெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1989‑ஆம் ஆண்டில் இந்திய காவல் பணியில் (IPS) பஞ்சாப் கேடரில் பணியாற்றியவர்.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தான் - இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றியவர்.

பராக் ஜெயின்

கனடா, இலங்கை போன்ற நாடுகளிலும் இந்தியாவின் நுண்ணறிவுச் செயலகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றியவர். குறிப்பாக கனடாவில் சில முக்கியமான அமைப்புகளை ரகசியமாகக் கண்காணித்தவர்.

ஜம்மு–காஷ்மீரில் 370 நீக்கப்பட்டபோதும், பாலகோட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதும் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.

பராக் ஜெயின்

நாட்டின் பாதுகாப்புப் பணியில் மனித மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு இரண்டிலும் சிறந்து விளங்கி வரும் பராக் ஜெயின் 2025 ஜூலை 1 முதல் 2 வருடக்காலத்திற்கு 'RAW' உளவு அமைப்பின் தலைவராகப் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``விசிக, காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?'' - பாமக அன்புமணி கேள்வி!

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இதற்கிடையே ராமதாஸ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை என்ற... மேலும் பார்க்க

`பாதிக்கப்பட்ட பெண்ணும் மகள்தான்; என் மகன் மீது நடவடிக்கை எடுங்கள்' -குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை

கடந்த ஜூன் 25-ம் தேதி அன்று கொல்கத்தா நகரின் சவுத் கொல்கத்தா சட்டக் கல்லூரியின் வளாகத்தில் 24 வயது மாணவி மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட விவகாரம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில்... மேலும் பார்க்க

Ground water tax: நிலத்தடி நீருக்கு வரி விதிப்பா? – மத்திய அரசு விளக்கம்!

நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்க மத்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஜூன் 27) தகவல்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து பலரு... மேலும் பார்க்க

ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக் குழுவில் கமல்; "தாமதமான அங்கீகாரமே..." - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திரைப்படத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்குத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக இணைய நடிகர் கமல் ஹாசன் உள்பட 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.Oscars ஆஸ... மேலும் பார்க்க

"அமைச்சருக்கு இது அழகல்ல" - ராஜ கண்ணப்பனுக்கு எதிராகப் போராட்டம்; அரசியல் கட்சிகள் எச்சரிப்பது என்ன?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 4-வது நபராக வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் ராஜ கண்ணப்பன். மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் விவகாரத்தில் மிகவும் பொறுப்பற... மேலும் பார்க்க

`காலை உணவில் பல்லி' - 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி; திருப்பூர் பள்ளியில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் வழங்கப்ப... மேலும் பார்க்க