செய்திகள் :

Salman Khan: ``என் வாழ்க்கை கடவுள் கையில்'' - லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் குறித்து சல்மான் கான்

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வந்தான். இதனால் சல்மான் கானின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளியில் சென்றால் பாதுகாவலர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்போடு செல்வது வழக்கம்.

சல்மான் கான் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதோடு சல்மான் கான் பண்ணை வீட்டிற்குச் செல்லும்போதும் கொலை செய்ய முயன்றனர்.

இப்போது நடிகர் சல்மான் கான் சிகந்தர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது சல்மான் கான் சிகந்தர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.

படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சல்மான் கானிடம் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''எனது வாழ்க்கை கடவுள் கையில் இருக்கிறது. எல்லாம் கடவுள், அல்லா பார்த்துக்கொள்வார். என்ன எழுதப்பட்டுள்ளதோ எழுதப்பட்டதுதான். அவ்வளவுதான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் கான்

ஒரு முறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது குறித்து சல்மான் கான் அளித்த பேட்டியில், ''சில நேரங்களில் அதிகமானோர் நம்மை சுற்றி வருவது கூட பிரச்னையாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

சல்மான் கான் ராஜஸ்தானிற்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது அபூர்வ வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் அந்த மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். எனவே மான்களை வேட்டையாடிய காரணத்திற்கு சல்மான் கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Sikandar: வெளியாவதற்கு முன்பே டெலிகிராமில் லீக் ஆன சல்மான் கான் திரைப்படம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியானது சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம். வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே ஆன்லைனில் பல பைரேட்டட் வலைதளங்களில் இந்த படம் கிடைப... மேலும் பார்க்க

"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - சல்மான் கான் ஆதங்கம்

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் 'சிக்கந்தர்' படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கானும், ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருகின்றனர். நாளை ( மார்ச் 30) இத்திரைப்படம் வெளியாக இருக்கும் ... மேலும் பார்க்க

Krrish 4: ஹ்ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 4 படத்தை இயக்கப்போவது இவர்தான்; வெளியான செம அப்டேட்!

இந்தியாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் மிகவும் முக்கியமானது க்ரிஷ். இந்த படத்தின் நான்காவது பாகம் குறித்து சமீபத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.க்ரிஷ் படத்தின் முதல் 3 பாகங்களை ராக்கேஷ் ரோஷ... மேலும் பார்க்க

நடிகர் சல்மான் கான் அணிந்த ரூ.34 லட்சம் மதிப்பிலான ராம ஜென்மபூமி கைக்கடிகாரம்... சிறப்பம்சம் என்ன?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சிகந்தர் படம் வரும் 30ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சல்மான் கான் பலத்த பாதுகாப்புடன் கலந்து வருகிறார். அவ்வாறு கலந்... மேலும் பார்க்க

``ரூ.90 கோடி கடன், நடந்து சென்றேன்; இப்போது ரூ.3000 கோடிக்கு சொத்து..'' -மனம் திறந்த அமிதாப்பச்சன்

நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார். அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்கவேண்டியிருந்தது. தினம் தினம் கடன் கொடுத்தவர்கள் அவரது வ... மேலும் பார்க்க

Sikandar: "ராஷ்மிகாவின் மகளுடனும் நடிப்பேன்" - சர்ச்சையான சல்மான் கானின் பேச்சு; பின்னணி என்ன?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ள 'சிக்கந்தர்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது.37 ஆண்டுகளாகப் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் ... மேலும் பார்க்க