செய்திகள் :

Seeman: ``பாமக விரிசலை சிமெண்டால் அல்ல; அன்பால் பூச வேண்டும்!'' - வழி சொல்லும் சீமான்!

post image

'சீமான் செய்தியாளர் சந்திப்பு!'

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசியிருந்தார்.

சீமான்
சீமான்

சீமான் பேசியதாவது, 'தமிழ்க்கடவுள் முருகன் என்கிறீர்கள். பிறகு தமிழில் வழிபாடு செய்வதில் என்ன பிரச்னை? தமிழிலும் வழிபாடு என்கிறீர்களே. கருணாநிதிதான் தமிழ்க்கடவுள் எனச் சொல்வதை இந்த சனம் கேட்டுக் கொண்டு நிற்கிறது.

செம்மொழிக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எங்களுடைய முன்னோர்கள் யாரும் மொழியைக் காக்க போராடவில்லையா? கீழடியில் 2 ஏக்கரில் மட்டும் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்கிறீர்களே? 200 ஏக்கர் தோண்டி அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டியதுதானே. தமிழர்களின் பெருமை முழுமையாக வெளிவரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

சீமான்
சீமான்

இந்தியா முழுவதும் கள்ளுக்கு அனுமதி இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் தடை? கள்ளை அனுமதித்தால் உங்களின் சாராயத் தொழிற்சாலை அடிபடும் என்று பயப்படுகிறீர்கள். ஸ்ரீகாந்தும் கிருஷ்ணாவும் மட்டும்தான் போதைப் பொருளை பயன்படுத்தினார்களா? அவர்கள் இருவரும் அப்பாவிகள். இவர்களை கைது செய்ததால் போதைப்பொருள் ஒழிந்துவிடுமா? குற்றத்துக்கான காரணங்களை கண்டறிந்து களையுங்கள்.

மத்திய அரசு இந்த மாநிலத்தின் நில வளத்துக்காகவும் வரிக்காகவும் மட்டும்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறது. பா.ம.க-வில் ஏற்பட்டிருக்கும் சிக்கல் ஒரு உள்கட்சி பிரச்னை. செல்வப்பெருந்தகை ராமதாஸ் ஐயாவை சந்தித்ததைப் போல நானும் சந்திப்பேன். அன்புமணியையும் சந்திப்பேன்.

சீமான்
சீமான்

பா.ம.க தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல. வன்னிய மக்களின் உரிமைகளுக்காக உருவான கட்சி. பா.ம.க-வில் ஏற்பட்டிருக்கும் விரிசலை சிமெண்டால் அல்ல, அன்பால் பூசி சரி செய்ய வேண்டும்.'' என்றார்.

``மும்பையில் இந்தி எதிர்ப்பு பேரணி'' - 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்

மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார். சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கட்சியில் இருந்து வெளிய... மேலும் பார்க்க

TVK: `தமிழ்நாடு என்றாலே ஒன்றிய அரசுக்கு அலர்ஜி!' - தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கொந்தளிக்கும் தவெக

விஜய்யின் தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா பீகார் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் முன்னெடுத்திருக்கும் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து ஒரு அறிக்கையை வெளி... மேலும் பார்க்க

Marina Beach: `ப்ளூ பிளாக்' அங்கீகாரம் பெறும் மெரினா பீச்; என்னென்ன வசதிகள் அமைய உள்ளது?

மெரினா பீச் விரைவில் 'ப்ளூ பிளாக்' (Blue Flag) அங்கீகாரம் பெறப்போகிறதுப்ளூ பிளாக் சான்றிதழ் என்றால் சுத்தமான, பாதுகாப்பான, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற கடற்கரை என்பதற்கான அடையாளம் ஆகும். ஆக, மெரினா பீச்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாவல் பழங்கள் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்?

Doctor Vikatan:நாவல் பழம் சாப்பிட்டால் தொண்டை கட்டுவது ஏன்? ஜலதோஷம் பிடிக்குமா, நாவல்பழ கொட்டைகளை பொடியாக்கி, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும் என்பது உண்மையா? அதை எப்படி சரியான ப... மேலும் பார்க்க

``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்பத் சொல்வதென்ன?

"மொழிகளை வைத்து நம்மிடையே பிரிவினை உண்டாக்க நினைப்பவர்களுக்கு நாம் பலியாகக் கூடாது.." என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.அர்ஜுன் சம்பத்மதுரை எஸ்.எஸ்.காலனியிலுள்ள காஞ்சி மகா ... மேலும் பார்க்க