செய்திகள் :

Trump-ன் புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு `ரூ.13 ஆயிரம் கோடி' இழப்பு ஏற்படும் - ஏன்?

post image

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதைக் செலவு மிக்கதாக மாற்றும் ட்ரம்ப்பின் 'ஒரு பெரிய அழகான மசோதா'  (One Big Beautiful Bill Act) மீதான வாக்கெடுப்பு நடந்துள்ளது.

இந்த மசோதா, அமெரிக்கர் அல்லாதவர்கள் செய்யும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் 5% வரி விதிக்க வழிவகை செய்கிறது. இதனால் குடியேறிகள் அல்லாத விசாதாரர்கள் (H1B போன்றவை), கிரீன் கார்ட் வைத்திருப்போர் அனைவரும் பாதிக்கப்படுவர்.

Visa, Green Card
Visa, Green Card

இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் பணத்தில் 5% எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு எந்த வரம்பும், விலக்கும் கிடையாது. அதாவது சிறிய தொகையாக இருந்தாலும், பெரும் பணமாக இருந்தாலும் 5% எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால் பணம் அனுப்பும் நபர் அமெரிக்கராகவோ, அமெரிக்க குடியுரிமை பெற்றவராகவோ இருந்தால் இந்த 5% பிடித்தம் இருக்காது.

13 ஆயிரம் கோடி இழப்பு!

இந்த சட்டத்தால் அமெரிக்காவில் வசிக்கும் 32 லட்சம் இந்திய வம்சாவளியினர் உள்பட 45 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட பண அனுப்புதல் கணக்கெடுப்பின்படி, 2023-24 ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து மொத்தம் 118.7 பில்லியன் டாலர்கள் வந்திருக்கிறது. இதில் 28% அதாவது 32 பில்லியன் டாலர்கள் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது.

USD

32 பில்லியன் டாலர்களில் 5% என்றால், 1.6 பில்லியன் டாலர்கள். இந்திய சமூகத்துக்கு 13.6 ஆயிரம்கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்படவுள்ளது.

இந்த சட்டம் பணப் பரிமாற்றத்தை மட்டுமல்லாமல், முதலீட்டு வருமானத்தையும், பங்குகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் பாதிக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

One Big Beautiful Bill Act இந்தியர்கள் மற்றும் அமெரிக்கரல்லாத வெளிநாட்டவர்களைப் பாதிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

``நேரு பாகிஸ்தானுக்கு ரூ.83 கோடி வழங்கினார்; அதை வைத்து தான் பாகிஸ்தான்.." - சிவ்ராஜ் சிங் பேச்சு

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலையொட்டி, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா. இது குறித்து தற்போது இந்திய மக்களிடம் கருத்து கேட்கத் தொடங்கியுள்ளது. இது ... மேலும் பார்க்க

Stalin-க்கு போகும் மினிஸ்டர்ஸ் ரிப்போர்ட், இன்பாஃர்ம் செய்த Kanimozhi! | Elangovan Explains

அதிமுக, பாஜக, விசாரணை அமைப்புகள் என வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள். இதை சமாளிக்க உள் கட்சியில், ஒவ்வொரு மாவட்டத்தையும், தொகுதியையும் வலுப்படுத்த மண்டல பொறுப்பாளர்களை உருவாக்கிய மு.க ஸ்டாலின். 'மி... மேலும் பார்க்க

``பேச்சு வார்த்தையில் அமெரிக்கா இல்லாவிட்டால் புதினுக்கு தான் லாபம்!'' - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?

ரஷ்ய அதிபர் புதின் உடனான இரண்டு மணிநேர தொலைபேசி உரையாடலுக்கு பிறகு, அந்த தகவலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்களுக்கு அது குறித்து தெரிவித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் தனது சமூக... மேலும் பார்க்க

``ரஷ்யா, உக்ரைன் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரணும்'' - வணிகத்தை முன்னிறுத்தி ட்ரம்ப் வைத்த செக்

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.கடந்த வார ரஷ்யா - உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஓரளவு சமாதானத்துக்கு வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியானதா?

Doctor Vikatan:ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள். ஒருவேளை... மேலும் பார்க்க

`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் வேளாண்மை, பால் வளம், மீன் வளம் ஆகிய துறைகளில் தமிழகம் டாப் இடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்களால் கேழ்வரகு, கொய்... மேலும் பார்க்க