செய்திகள் :

UP : பாஜக அலுவலகத்தில் பெண்ணிடம் தகாத நடத்தை... பாஜக நிர்வாகி விளக்கம் அளிக்க கட்சி நோட்டீஸ்

post image

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோண்டாவில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஒரு பெண்ணுடன் பாஜக தலைவர் ஒருவர் நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக கோண்டா தலைவர் அமர் கிஷோர் காஷ்யப், கட்சி அலுவலகத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கட்சி ஊழியர் ஒருவர் பாஜக தலைமையிடம் முறையான புகார் அளித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து, கிஷோர் காஷ்யப் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கட்சியால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டதாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்த் நாராயண் சுக்லா, கிஷோர் காஷ்யப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மாநிலத் தலைவரின் அறிவுறுத்தல்களின்படி, ஏழு நாட்களுக்குள் பாஜக மாநில அலுவலகத்திற்கு எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்குமாறும், குறிப்பிட்ட காலத்திற்குள் சரியான பதிலை வழங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வைரலான வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர், அலுவலகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பெண்ணை அணைத்தது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோ ஏப்ரல் 12ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அமர் கிஷோர் கூறுகையில், `அந்தப் பெண் கட்சியின் உறுப்பினராவார், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தான் ஓய்வெடுக்க ஒரு இடம் கேட்டதால் தங்க இடம் கொடுத்ததாகவும் அவரை அழைத்துச் செல்லுகையில் படிக்கட்டில் ஏறும்போது அந்தப் பெண்ணுக்கு தலை சுற்றல் ஏற்பட்டது, நான் அவருக்கு ஆதரவாக கையை பிடித்தேன். என் மீது அவதூறு பரப்புவதற்காக அந்த காட்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன’ என்று கூறியிருக்கிறார்.

தேர்தல் பத்திரம்: நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு டெண்டர்? உச்ச நீதிமன்ற தலையீட்டால் பணிந்த மகா. அரசு

மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்திலிருந்து மும்பையின் மேற்கு பகுதியில் இருக்கும் பயந்தர் என்ற இடத்தை இணைக்கும் விதமாக, மலை மற்றும் வனவிலங்குகள் வாழக்கூடிய வனப்பகுதி வழியாகப் பூமிக்கு அடியில் சுரங்க ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "நாங்கள்தான் காட்டின் மன்னர்கள்" - பழங்குடிகளின் வாழ்க்கையைப் பாப் பாடலாக்கும் பெண்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, கட்சிரோலி, கோண்டியா போன்ற மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.பழங்குடியின மக்களுக்காக மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அவர்களின்... மேலும் பார்க்க

படுக்கை இல்லாததால் கொரோனா நோயாளியை கொலைசெய்ய சொன்ன அரசு டாக்டர்; கசிந்த ஆடியோவால் சிக்கினார்!

2020-21ம் ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கத்தால் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர். அதிகமான மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்த்துக்கொள்ள போதிய இடவசதி ... மேலும் பார்க்க

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் 4 மாடிகள்; பிரமாண்டம், சொகுசு! - ரூ.639 கோடிக்கு வாங்கிய லீனா திவாரி

மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினை... மேலும் பார்க்க

’வளர்ந்ததும் ராணுவத்தில் சேருவேன்'- ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவன்!

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ - மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முஸ்கான் என்ற பெண் தனது கணவனை காதலன் துணையோடு கொலை செய்து ஊதா கலர் டிரம்மில் போட்டு சிமெண்ட் போட்டு வைத்தார். இச்சம்பவத்தை போன்ற மேலும் சி... மேலும் பார்க்க