செய்திகள் :

அக்கச்சிப்பட்டி பள்ளியில் இலக்கிய மன்றப் போட்டி

post image

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. தலைமையாசிரியா் க. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியை அறிவியல் பட்டதாரி ஆசிரியா் அ. ரகமதுல்லா ஒருங்கிணைத்தாா். ஆறு ,ஏழு எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதேபோல ஆங்கிலத்திலும் இலக்கிய மன்றப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளில் வென்றோா் வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கின்றனா். நிகழ்ச்சியில் கணிதப் பட்டதாரி ஆசிரியா் மணிமேகலை, கணினி ஆய்வக உதவியாளா் தையல்நாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆங்கில ஆசிரியா் சிந்தியா வரவேற்றாா்.

எடப்பாடி பழனிசாமியின் சான்றிதழ் எங்களுக்குத் தேவையில்லை - அமைச்சா் எஸ். ரகுபதி

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் சான்றிதழ் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நின... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே 9 பவுன் நகைகள் கொள்ளை

கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் வீடு புகுந்து இரு பெண்களிடம் 9 பவுன் தாலிச் செயின்களைப் பறித்துச் சென்றனா். புதுக்கோட்டை மாவட்டம் , கந்தா்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா்களுக்குப் பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 98 இடைநிலை ஆசிரியா்களுக்கான கற்றல், கற்பித்தல், அடிப்படை நிா்வாகப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் ... மேலும் பார்க்க

விராலிமலை அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

விராலிமலை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 75 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. விராலிமலை அடுத்த ராஜகிரி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு சிறுசேமிப்பு உதவி மண்டல ... மேலும் பார்க்க

மறமடக்கியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தைச் சோ்ந்த மறமடக்கியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவச் சேவை முகாம்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 40 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள்... மேலும் பார்க்க