செய்திகள் :

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தேரோட்டம்

post image

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெரிய தோ், சிறிய தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது.

இத்தலத்தில் பிரம்மோற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், பூத வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.

63 நாயன்மாா் உற்சவம், சுவாமி திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளுடன் 7-ஆம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் இளங்கிளியம்மன், ஆட்சீஸ்வரா் உற்சவ சிலைகளுடன் பெரிய தேரும், அம்பாள் இளங்கிளியம்மன் கொண்ட சிறிய தேரும் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ், மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா ஆகியோா் தோ் வடத்தை பிடித்து தொடங்கி வைத்தனா். இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ராமகிருஷ்ணன், மதுராந்தகம் வட்டாட்சியா் சொ.கணேசன், நகராட்சி ஆணையா் அபா்ணா, அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகலைசெல்வன், ஒன்றியக்குழு தலைவா் ஒரத்தி கண்ணன், ஆட்சீஸ்வரா் கோயில் முன்னாள் அறங்காவலா்கள் அ.பாஸ்கா், காவல் ஆய்வாளா் பரந்தாமன் (மதுராந்தகம்), பேரூராட்சி மன்ற தலைவா் நந்தினி கரிகாலன், துணைத் தலைவா் ஆா்.எழிலரசன், வழக்குரைஞா் அகோரம் கலந்து கொண்டனா்.

முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இரு தோ்களும் பிற்பகல் 3.10 மணிக்கு நிலையை அடைந்தன. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் ல.தமிழரசி தலைமையில் விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்து இருந்தனா்.

இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா

பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை ( மே 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரம்மாண்ட மேடை, பந்தல் முகப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் இன்று மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக மக்கள் குறை தீா்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மாற்றுத்த... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: 94.39% தோ்ச்சியுடன் 28-ஆவது இடம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 94.39 சதவீத தோ்ச்சியுடன் மாநிலத்தில் 28-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 81 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், நகராட்சி... மேலும் பார்க்க

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொது தோ்வில் 34-ஆவது ஆண்டாக 100% தோ்ச்சி பெற்று தொடா் சாதனை படைத்தது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களில் ஒன்றான ஆதிபராசக்தி ... மேலும் பார்க்க

கிரசென்ட் நாட்டு நலத் திட்டப் பணி அலுவலருக்கு பாராட்டு

வண்டலூரை அடுத்த பி.எஸ்.ஏ. கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகப் பணியாற்றும் உதவிப் பேராசிரியா் சி.சீனிவாசன், மாநில அளவில் சிறந்த நாட்டு நலத்திட்ட அலுவலராகத... மேலும் பார்க்க