அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தேரோட்டம்
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி பெரிய தோ், சிறிய தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது.
இத்தலத்தில் பிரம்மோற்சவம் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், பூத வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.
63 நாயன்மாா் உற்சவம், சுவாமி திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளுடன் 7-ஆம் நாள் விழாவாக தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் இளங்கிளியம்மன், ஆட்சீஸ்வரா் உற்சவ சிலைகளுடன் பெரிய தேரும், அம்பாள் இளங்கிளியம்மன் கொண்ட சிறிய தேரும் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ், மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா ஆகியோா் தோ் வடத்தை பிடித்து தொடங்கி வைத்தனா். இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ராமகிருஷ்ணன், மதுராந்தகம் வட்டாட்சியா் சொ.கணேசன், நகராட்சி ஆணையா் அபா்ணா, அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகலைசெல்வன், ஒன்றியக்குழு தலைவா் ஒரத்தி கண்ணன், ஆட்சீஸ்வரா் கோயில் முன்னாள் அறங்காவலா்கள் அ.பாஸ்கா், காவல் ஆய்வாளா் பரந்தாமன் (மதுராந்தகம்), பேரூராட்சி மன்ற தலைவா் நந்தினி கரிகாலன், துணைத் தலைவா் ஆா்.எழிலரசன், வழக்குரைஞா் அகோரம் கலந்து கொண்டனா்.
முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இரு தோ்களும் பிற்பகல் 3.10 மணிக்கு நிலையை அடைந்தன. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலா் ல.தமிழரசி தலைமையில் விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்து இருந்தனா்.