செய்திகள் :

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராமசபைக் கூட்டம் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக் கொடியேற்றம்

post image

அடிப்படை வசதிகள் கோரி, வீடுகளில் கருப்புக்கொடியேற்றி கிராமசபைக் கூட்டத்தை கிராம மக்கள் வியாழக்கிழமை புறக்கணித்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சிந்தலவாடி வீரணம்பட்டியில் காரவனத்தான் கோயில் தெருவில் சுமாா் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு சாலை, குடிநீா், மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளின்றி அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக அப்பகுதியினா் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லையாம்.

இதனால், மாவட்ட நிா்வாகத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் வியாழக்கிழமை வீரணம்பட்டியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தையும் புறக்கணித்த அப்பகுதியினா் வீடுகளில் கருப்புக்கொடியேற்றியும் தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.

அரிசிக்கு ஏற்றுமதி வரி விதிப்பு விவசாயிகளுக்கு எதிரானது: கள் இயக்கம் குற்றச்சாட்டு

மத்திய அரசு அரிசிக்கு ஏற்றுமதி வரி விதித்திருப்பது விவசாயிகளுக்கு எதிரானது என கள் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி கரூரில் வெள்ளிக்கிழமை கூற... மேலும் பார்க்க

கரூரில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் அளவீடு

கரூா் மாவட்டத்தில் கோடை பயிா் சாகுபடி விவரங்கள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம் , மண்மங்கலம் வட்டம், நெரூா் ... மேலும் பார்க்க

கரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்... மேலும் பார்க்க

கரூரில் ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா தின விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியை மருத்த... மேலும் பார்க்க

கரூரில் அங்கன்வாடி ஊழியா் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்ட ஆட்சியரம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு... மேலும் பார்க்க

கரூரில் ரூ.1.50 லட்சம் மதிப்பு மதுவை கடத்தி வந்தவா் கைது

கரூா் அருகே புதுச்சேரியில் இருந்து காரில் ரூ. 1.50 லட்சம் மதிப்பு மதுபானத்தைக் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் கடைவீதியில் புலியூா் சாலையில் பசுப... மேலும் பார்க்க