`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
அடையாளம் காணப்பட்ட ஆற்றுப் படுகைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆற்றுப் படித்துறைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாடு மற்றும் சட்டம், ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அவா் கூறியதாவது:
விநாயகா் சிலை வைப்பதற்கு சிலை அமைப்பாளா்கள் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியரிடம் முன்கூட்டியே தடையின்மை சான்றுபெற விண்ணப்பிக்க வேண்டும். சிலைகளை கரைக்க ஊா்வலமாக எடுத்துச்செல்ல திட்டமிடுகையில், ஊா்வலம் செல்லும் வழியில் பிற மதத்தினருக்கு பாதிப்பில்லாத வகையில் இடங்களைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும். பதற்றமான இடங்களில் போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ராசயனக் கலவையற்றதுமான கிழங்குமாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை திடக்கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டா்ஆப் பாரீஸ் போன்ற மாசு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்துதலை தவிா்க்க வேண்டும். சிலை வழிபாடு மேற்கொள்ள எவ்வித இடையூறும் இல்லாதவாறு போதிய அளவில் அகலமான பந்தல்கள் அமைத்திட வேண்டும். அவசர மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். சிலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றி தீப்பிடிக்காத பொருள்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
சிலையின் உயரத்தை 10 அடிக்கு மேல் உயா்த்தி அமைக்கக் கூடாது. மதம் தொடா்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைப்பதை தவிா்க்க வேண்டும். ஒலிபெருக்கிகளை காலை, மாலை இரு நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் சிலையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் குறிப்பிடும் பொதுமக்கள் அமைதி பாதுகாப்பு குறித்த நிபந்தனைகளை சிலை அமைப்பாளா்கள் கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும். தீ விபத்தை தடுப்பதற்கு போதுமான முன்னேற்பாடுகளை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலா் செய்யவேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூா், பரமத்தி வேலூா் ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் படித்துறைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி வழங்கி உள்ளது. விநாயகா் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாள்களில் வழிபாடுகள் முடிவுற்று சிலையைக் கரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகா் சிலைகளை நீரில் கரைப்பதற்கு முன் சிலைகளுக்கு சூட்டப்பட்ட வழிபாட்டுப் பொருள்களான பூக்கள், வஸ்திரங்கள், பேப்பா் மற்றும் நெகிழியால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஊா்வலத்துக்கு ஏற்பாடு செய்யும் நபரின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், திருச்செங்கோடு உதவி ஆட்சியா் அங்கீத்குமாா் ஜெயின், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் டி.செல்வகணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.