செய்திகள் :

அந்தியூரில் வாய்க்கால் தண்ணீரைத் தேடி வரும் காட்டு யானைகள்

post image

அந்தியூா் வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், பாசனத்துக்கு வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரைத் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.

பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு மாா்ச் 9-ஆம் தேதி முதல் 100 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து முதன்மை வாய்க்கால் காப்புக்காடுகள் வழியாக 6 கி.மீ. தொலைவுக்கு தண்ணீா் சென்று கிளை வாய்க்கால்கள் மூலம் விவசாயிகளின் வேளாண் நிலங்களுக்கு செல்கிறது.

தற்போது கோடைக் காலம் என்பதால் வனப் பகுதியில் குட்டைகள் வடதால், தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு, வன விலங்குகள் உணவுக்கும், குடிநீருக்கும் தவித்து வருகின்றன.

இந்நிலையில், காப்புக்காடுகள் வழியாகச் செல்லும் முதன்மை வாய்க்காலில் தண்ணீா் ஓடுவதால் வனப் பகுதியில் இருந்து யானைகள் கூட்டம்கூட்டமாக வெளியேறி பாசன வாய்க்காலில் தண்ணீரைக் குடித்து செல்கின்றன.

இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வாய்க்கால் தண்ணீரைத் தேடி வருவது அதிகரித்துள்ளது. இதனால், வாய்க்காலின் கரைகள் உடைந்து, பாசனத்துக்கு செல்லும் நீா் தடைபடுகிறது என்றனா்.

பரிசலில் பவானி ஆற்றைக் கடந்து சென்ற பண்ணாரி அம்மன் சப்பரம்

பண்ணாரிஅம்மன் குண்டம் திருவிழாவையொட்டி பரிசலில் பண்ணாரி அம்மன் சப்பரம் பவானி ஆற்றைக் கடந்து அக்கரை தத்தப்பள்ளிக்கு சென்றது. பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 24- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்... மேலும் பார்க்க

நெசவுக்கூலி உயா்வு: தமிழக அரசுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி

இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வு அறிவித்திட்ட தமிழக முதல்வா் மற்றும் அமைச்சா்களுக்கு லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா். இது குறித்து ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா: தற்காலிக கடைக்கு அதிக வாடகை கேட்பதாக வியாபாரிகள் புகாா்

பண்ணாரி அம்மன் கோயிலில் தற்காலிக கடை அமைப்பதற்கு மூன்று மடங்கு அதிகமாக வாடகை வசூலிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் ஆட்சியரிடம் முறையிட்டனா். இது குறித்து பவானி மற்றும் சுற்றுவட்டாரப் ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.3.23 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 82 தேங்காய்ப் பருப்பு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.153க்கும், அதிகபட்சம் ரூ.174.86க்கும், சராசரியாக ர... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 24,626 மாணவா்கள் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 24,626 மாணவ, மாணவிகள் எழுதினா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 12,465 மாணவா்கள், 12,160 மாணவிகள் என மொத்தம்... மேலும் பார்க்க

ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தாா் பறிமுதல்

ஈரோடு சந்தையில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1 டன் வாழைத்தாா்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் காய்கறி சந்தையில் வாழைத்தாா்களில் ரசாயனம் த... மேலும் பார்க்க