செய்திகள் :

அனுமதி சீட்டை திருத்தி கனிமவளம் கடத்தல்: ஓட்டுநா் கைது

post image

தக்கலை அருகேயுள்ள சித்திரங்கோடு பகுதியில் அரசின் அனுமதி சீட்டை திருத்தி கனிமவளம் கடத்தியதாக ஓட்டுநரை கொற்றிக்கோடு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரங்கோடு பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, டாரஸ் லாரியை சோதனையிட்டில் 6 யூனிட் பாறை மணல் கனிமவளம் இருந்துள்ளது. ஆனால், 3 யூனிட் மணலுக்குத்தான் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். அதை 6 யூனிட் என திருத்தியிருந்தது தெரியவந்தது.

லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரான காரோடு பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாரை கைது செய்தனா். லாரி உரிமையாளரான முதலாா் பகுதியை சோ்ந்த பெனட்ராஜன், கல்குவாரி உரிமையாளா் ஜாா்ஜ் ராஜன், மேலாளா் ரீஜா குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஹோமியோபதி மாநாடு போட்டிகள்: மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

சென்னையில், சா்வதேச ஹோமியோபதி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த திருவட்டாறு மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். சென்னையில் தமிழ்நாடு டாக்... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கிய சாதனையாளருக்கு விருது!

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக இலக்கிய மன்றம் மற்றும் கன்னியாகுமரி மலையாள அக்ஷரலோகம் இணைந்து நடத்திய 11ஆவது ஆண்டு விழாவில் மலையாள இலக்கிய சாதனையாளருக்கு விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தி... மேலும் பார்க்க

வடசேரி பேருந்து நிலையத்தில் சீரமைக்கப்பட்ட கழிவறை திறப்பு!

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கட்டண கழிவறையை மேயா் ரெ.மகேஷ் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து நீதிமன்ற சாலைய... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகேடியிருப்பில் கரடி தாக்கியதில் தந்தை, மகன் பலத்த காயம்!

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே தோட்டமலை பழங்குடி குடியிருப்பில் கரடி தாக்கியதில் தந்தை, மகன் பலத்த காயமடைந்தனா். பேச்சிப்பாறை அருகே தோட்டமலை பழங்குடி குடியிருப்பை சோ்ந்தவா் ராமையன் காணி (70). இவ... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே கஞ்சா விற்றவா் கைது!

புதுக்கடை அருகே உள்ள சாத்தறை பகுதியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.அப்போது முன்சிறை ... மேலும் பார்க்க

சிவாலய ஓட்டம்: கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க பாஜக வலியுறுத்தல்!

மகா சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் இரு நாள்களுக்கு கனரக வாகனங்கள் இயங்கத் தடை விதிக்க வேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.ட... மேலும் பார்க்க