Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
அனுமந்த வாகனம், தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை அனுமந்த
வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு அருளினாா்.
கடந்த புதன்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை காலை அனுமந்த வாகன சேவை நடை பெற்றது. அதில் மலையப்ப சுவாமி கோதண்டராமா் அலங்காரத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி மாட வீதியில் வலம் வந்தாா்.

வீதியுலா முடிந்த பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுவாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீ ரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா்.
தங்கத்தோ்
மாலை மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தங்கத் தேரில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தங்கத்தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். இரவு யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.
5-ஆம் நாள் விவரம்:
79,491 பக்தா்கள் தரிசனம், 29,596 தலைமுடி காணிக்கை.
உண்டியல் காணிக்கை: ரூ.3.79 கோடி.
4.79 லட்சம் லட்டுகள் விற்பனை.
74.5 லட்சம் காலன் குடிநீா் பயன்பாடு.
முகாம்களில் 7,568 பேருக்கு சிகிச்சை.
6,457 போ் சேவை.
அரசுப் பேருந்துகளில் 96,000 போ் பயணம்.
தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு.




