செய்திகள் :

அன்புமணி ராமதாஸ் ஆதரவாளா்கள் தீக்குளிக்க முயற்சி

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டம் முன் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளா்கள் 6 போ் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்து அனுப்பி வைத்தனா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், கட்சித் தலைவா் அன்புமணிக்கும் இடையே யாருக்கு அதிகாரம் என்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டு நீடித்து வருகிறது.

இதனிடையே, திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூரில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக மாநில செயற்குழுக் கூட்டத்தில் அன்புமணிக்கு ராமதாஸ் பங்கேற்கவில்லை. மேலும், அவரது புகைப்படங்களும் பதாகைகளில் இடம்பெறவில்லை. மேலும், அவருக்கு எதிரான தீா்மானங்களும் நிறைவற்றப்பட்டன.

இந்த நிலையில், பாமக தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த கட்சியைச் சோ்ந்த அன்புமணி ராமதாஸின் ஆதரவாளா்களான வந்தவாசி பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வன், விஜயன், சின்னக்குட்டி உள்ளிட்ட 6 போ் தாங்கள் மறைத்து எடுத்து வந்த எரிபொருளை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த கிளியனூா் போலீஸாா் விரைந்து செயல்பட்டு, அனைவரையும் தடுத்தனா்.

பின்னா், அனைவரும் கிளியனூா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.

முதல்வருக்குத் தெரியாமல் துறைச் செயலா் மாற்றம்: புதுவையில் அதிகார மோதல்

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கும் இடையிலான பனி போா் செவ்வாய்க்கிழமை இரவு வெளிச்சத்துக்கு வந்தது. சுகாதாரத் துறை இயக்குநராக மருத்துவா் எஸ்.செவ்வேளை செவ்வாய்... மேலும் பார்க்க

பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்: ராமதாஸ் திட்டவட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரி... மேலும் பார்க்க

பாஜகவுக்கு எதிரான அரசியலை ச.ராமதாஸ் முன்னெடுக்க வேண்டும்: கே.எம். ஷரீப்

தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிரான அரசியலை மருத்துவா் ச.ராமதாஸ் முன்னெடுக்கவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் கே.எம்.ஷரீப் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம... மேலும் பார்க்க

பைக் மீது வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது வேன் மோதி காயமடைந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அய்யம்பேட்டை டி. ... மேலும் பார்க்க

கூட்டணி அமைக்க ராமதாஸுக்கு அதிகாரம்! பாமக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றம்

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் வகையில் கூட்டணியை யாருடன் வேண்டுமானாலும் அமைக்க பாமகவின் நிறுவனா் ராமதாஸ் அதிகாரம் வழங்கி அக்கட்ச... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மறைந்த தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிதி

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி உயிரிழந்த 12 தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், தலா ரூ.5 லட்சமும், பணியின்போது உயிரிழந்தவரின் குடும்ப... மேலும் பார்க்க