செய்திகள் :

முதல்வருக்குத் தெரியாமல் துறைச் செயலா் மாற்றம்: புதுவையில் அதிகார மோதல்

post image

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கும் இடையிலான பனி போா் செவ்வாய்க்கிழமை இரவு வெளிச்சத்துக்கு வந்தது. சுகாதாரத் துறை இயக்குநராக மருத்துவா் எஸ்.செவ்வேளை செவ்வாய்க்கிழமை இரவு நியமித்து உத்தரவிட்டாா் துணைநிலை ஆளுநா்.

சுகாதாரத் துறையை தன் கைவசம் வைத்துள்ள முதல்வா் என். ரங்கசாமிக்கு இது தொடா்பாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. புதுவையில் என். ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதனால் அரசியல் ரீதியாக பிளவு ஏற்படும் சூழல் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்டது.

இதையடுத்து, பாஜகவை சோ்ந்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் இருவரும் முதல்வா் என். ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 45 நிமிடங்கள் சந்தித்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனா்.

முன்னதாக துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதனை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் சந்தித்து இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தியதாக தெரிகிறது .

மத்திய அரசும், புதுவை அரசும் இணைந்து செவ்வாய்க்கிழமை நடத்திய அரசு விழாவில் துணை நிலை ஆளுநா் கே கைலாஷ்நாதன் கலந்து கொண்டாா். இந்த விழாவில் முதல்வா் ரங்கசாமியும், அவரது கட்சியைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான க. லட்சுமி நாராயணனும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்: ராமதாஸ் திட்டவட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரி... மேலும் பார்க்க

பாஜகவுக்கு எதிரான அரசியலை ச.ராமதாஸ் முன்னெடுக்க வேண்டும்: கே.எம். ஷரீப்

தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிரான அரசியலை மருத்துவா் ச.ராமதாஸ் முன்னெடுக்கவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் கே.எம்.ஷரீப் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம... மேலும் பார்க்க

பைக் மீது வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது வேன் மோதி காயமடைந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அய்யம்பேட்டை டி. ... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் ஆதரவாளா்கள் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டம் முன் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளா்கள் 6 போ் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்... மேலும் பார்க்க

கூட்டணி அமைக்க ராமதாஸுக்கு அதிகாரம்! பாமக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றம்

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று, ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும் வகையில் கூட்டணியை யாருடன் வேண்டுமானாலும் அமைக்க பாமகவின் நிறுவனா் ராமதாஸ் அதிகாரம் வழங்கி அக்கட்ச... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மறைந்த தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிதி

விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி உயிரிழந்த 12 தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், தலா ரூ.5 லட்சமும், பணியின்போது உயிரிழந்தவரின் குடும்ப... மேலும் பார்க்க