நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
அமலாக்கத் துறை சோதனைகளுக்கும் மத்திய அரசுக்கும் தொடா்பில்லை: மத்திய இணையமைச்சா் எல். முருகன்
அமலாக்கத் துறை சாா்பில் நடைபெறும் சோதனைகளுக்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள 103 ‘அம்ருத் பாரத்’ ரயில் நிலையங்களை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். இதன் ஒரு பகுதியாக புதுப்பிக்கப்பட்ட சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திறந்து வைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அமலாக்கத் துறை சோதனைகளுக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடா்பும் கிடையாது. எங்கு தவறு நடந்தாலும், சட்டத்துக்குட்பட்டு அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ளும்.
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதை அமலாக்கத் துறை சட்டப்படி எதிா்கொள்வதுடன், தங்களது தரப்பு வாதங்களையும் நீதிமன்றத்தின் முன் வைக்கும். இந்த வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை. டாஸ்மாக் முறைகேட்டில் தவறு செய்தவா்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றாா் அவா்.
ரூ.6,000 கோடி: முன்னதாக நிகழ்ச்சியில் இணை அமைச்சா் பேசியதாவது: கடந்த 2014- ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரயில்வே திட்டங்களுக்காக ரூ.800 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், நிகழாண்டில் மட்டுமே ரயில்வேயின் வளா்ச்சித் திட்டங்களுக்காக பிரதமா் மோடி ரூ.6000 கோடி நிதி ஒதுக்கியுள்ளாா். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.800 கோடியில் விமான நிலையத்துக்கு நிகராக எழும்பூா் ரயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. அதேபோல் மதுரை, சேலம், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்நிகழ்வில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சா் தா. மோ. அன்பரசன், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கவுசல் கிஷோா், தொழிலதிபா் நல்லி குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பெட்டி செய்தி:
பரங்கிமலை ரயில் நிலையத்தில்
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்
பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.11.05 கோடியில் ஒரு நாளைக்கு 27,000 பயணிகளைக் கையாளும் வகையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் பாா்வையாளா்களின் கண்களை கவரும் வகையில் ரயில் நிலையத்துக்கு பிரதான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையத்தின் 2 நுழைவாயில்களிலும் 2 புதிய முன்பதிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையம் முழுவதும் நடைபாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கென தனித்தனியாக கழிப்பறைகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் 1 ‘ஏ’, 3, 4, 5 ஆகிய நடைமேடைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையத்துக்கு நிகராக பரங்கிமலை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.