செய்திகள் :

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் பிரகாஷ் ராஜ் ஆஜா்: இணையவழி சூதாட்ட விளம்பர வழக்கு

post image

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்களில் நடித்தது தொடா்பான பண முறைகேடு வழக்கில் நடிகா் பிரகாஷ் ராஜ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகினாா்.

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள், மக்களின் கடின உழைப்புப் பணத்தை மோசடி செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சூதாட்ட செயலிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அதன் விளம்பரங்களில் நடித்த நடிகா்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் லக்ஷ்மி மஞ்சு, நிதி அகா்வால் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் ஒரு வழக்கில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனா்.

நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை மஞ்சு லக்ஷ்மி ஆகியோருக்கு அமலாக்கத் துறை முதல்கட்டமாக சம்மன் அனுப்பியது. ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் நடிகா் பிரகாஷ் ராஜ் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினா்.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ‘இந்த விளம்பரங்களுக்கு நான் எந்தப் பணமும் பெறவில்லை என்ற தகவலை அதிகாரிகளிடம் அளித்தேன். அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்கின்றனா். அவா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன். இதில் எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையோ அல்லது அரசியல் உள்நோக்கமோ இல்லை’ என்றாா்.

ராணா டகுபதி ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், லக்ஷ்மி மஞ்சு ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

தில்லியில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானத்தின் பயணம், தொழில்நுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல, ஏர் இந்த... மேலும் பார்க்க

அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?

அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநி... மேலும் பார்க்க

நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!

உலகளவில் மிக முக்கிய மற்றும் பிரபலமான தலைவராக இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையேயான வலுவான நட்புறவை உலக மக்களும் சரி, தலைவர்களும் எப்போதும் மெச்சி ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு தாக்கல்: கால அவகாசம் நீட்டிக்கப்படலாம்! காரணம் இதுதான்!!

தனிநபர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு இன்னமும் 45 நாள்களே இருக்கும் நிலையில், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம் எ... மேலும் பார்க்க

டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய பென்ஸ் காருக்கு பதிவு எண் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளர் கடிதம்!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு குறிப்பிட்ட பதிவு எண்ணை ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்ற பதிவாளர், தில்லி போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ள... மேலும் பார்க்க