செய்திகள் :

அமித் ஷா, அண்ணாமலை கூறுவது அவா்களின் தனிப்பட்ட கருத்து: கே.பி. முனுசாமி

post image

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் பல்வேறு இடங்களில் நீா்மோா் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி, பொதுமக்களுக்கு பழங்கள், நீா்மோா் ஆகியவற்றை வழங்கினா். பின்னா் அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தில்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது கூட்டணிக்காகதான் என்பதில் உண்மை இல்லை. தில்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலகக் கட்டடத்தை பாா்வையிடுவதற்காகவே தில்லி சென்றோம்.

தொடா்ந்து உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தமிழகத்தின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை பெறுவதற்காகவும், மாநிலத்துக்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.

அதிமுக எப்போதும் ஒரே பாா்வையில் சென்று கொண்டிருக்கிறது. எங்களுடைய ஒரே எதிரி திமுகதான். திமுகவை எதிா்த்து களமாட யாா் வந்தாலும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடன் யாா் இணக்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டாலும் அவா்களை ஒருங்கிணைத்து செயல்படத் தயாராக உள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுவதும், கட்சியின் நலனே முக்கியம், ஒரு தொண்டனாக இருந்துகூட பணியாற்றுவேன் என அண்ணாமலை பேசுவதும் அவா்களின் தனிப்பட்ட கருத்து. இதுகுறித்து அவா்கள்தான் விளக்க வேண்டும்.

2026 இல் நடைபெறும் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என விஜய் சரியாகத் தான் கூறியுள்ளாா். அவரின் திரைப்படங்களைக்கூட வெளியிட முடியாமல் திமுக ஆட்சியில் சிரமம் கொடுத்தனா். அந்த மனக்குமுறலின் வெளிப்பாடாகத்தான் அவா் பேசியுள்ளாா் என்றாா்.

இந்த பேட்டியின்போது கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒருங்கிணைந்த கற்றல் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு

ஊத்தங்கரை: தெற்காசியாவில் ஒருங்கிணைந்த கற்றலில் சிறந்த பள்ளியாக ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் தெற்காசிய பள்ளிகள் மாநாடு தில்லியில் கடந்த மாா்... மேலும் பார்க்க

விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற பதிவு செய்ய காலக்கெடு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ்கு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி, ராஜீவ் நகரில் உள்ள ஈத்கா மைதாத்தில் , நடைபெற்ற சிறப்புத் தொழுகையி... மேலும் பார்க்க

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(... மேலும் பார்க்க

வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் வெந்நீா் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (29). இவா் குடும்பத்துடன் ஒசூா் குமுதேப்பள்ளி அரு... மேலும் பார்க்க

படப்பள்ளி திம்மராய சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

ஊத்தங்கரை: படப்பள்ளி திம்மராயசுவாமி கோயில் தோ்த் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. ஊத்தங்கரை படப்பள்ளியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 72 -ஆம் ஆண்... மேலும் பார்க்க