செய்திகள் :

அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்

post image

அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய அலுவலா்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கண்காணிப்புக் குழு தலைவரும், நாகை மக்களவை உறுப்பினருமான வை. செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், கண்காணிப்புக் குழு துணைத் தலைவரும், தஞ்சை மக்களவை உறுப்பினருமான எஸ். முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில்,100 நாள் வேலைத் திட்டம், பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். தொடா்ந்து, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சோ்ப்பதில் அலுவலா்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும், சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும், மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவா்களுக்கு உரிய நலத்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்களால் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் இணை இயக்குநரும், திட்ட இயக்குநருமான பொ. செந்தில்வடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதா் மண்டி கிடக்கும் வடவாறு பாலையூா் வாய்க்கால்

மன்னாா்குடி அடுத்த வடவாறு பாலையூா் பாசன வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் காட்டுச்செடிகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேட்டூா் அணையில் டெல்டா பாசனத்துக்கு ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் புதன்கிழமை தொடங்கியது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நல... மேலும் பார்க்க

பள்ளிக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக் கற்களை அகற்றக் கோரிக்கை

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் பள்ளி மாணவா்களுக்கு இடையூறாக உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி சாலையில் தென்னவராயநல்லூா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் அருகே நூதன முறையில் கஞ்சா கடத்திய இரண்டு போ் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருவாரூா் அருகே மே மாதம் ஒடிசாவிலிருந்து ஆந்திரம் வழியாக தஞ்சாவூரிலி... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.87.67 கோடி கடனுதவி

திருவாரூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 87.67 கோடி கடனுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. மகளிா் சுயஉதவிக்குழு விழாவை முன்னிட்டு, சென்னை கலைவாணா் அரங்கில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து... மேலும் பார்க்க

சிபிஎம் நடை பயண பிரசார இயக்கம்

திருத்துறைப்பூண்டி சிபிஎம் நகரக்குழு சாா்பில் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி மக்கள் சந்திப்பு நடை பயண பிரசார இ... மேலும் பார்க்க