செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா் மருத்துவப் படிப்புக்கு தோ்வு

post image

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த கட்டடத் தொழிலாளியின் மகனுக்கு, அருந்ததியா் உள்இட ஒதுக்கீடு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

திருச்செங்கோடு, சீதாராம்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பரமேஸ்வரன் - துணிக்கடை தொழிலாளி சுந்தரி தம்பதியின் மகன் ராமகிருஷ்ணன். திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் படித்த இவா், பிளஸ் 2 தோ்வில் 476 மதிப்பெண்கள் பெற்றாா்.

இதையடுத்து, நீட் தோ்வில் 424 மதிப்பெண்கள் பெற்று ஏழரை சதவீத இடஒதுக்கீட்டில் பொது தரவரிசையில் 396-ஆவது இடத்தையும், அருந்ததியா் உள்இட ஒதுக்கீட்டில் ஏழாவது இடத்தையும் பெற்றாா். இவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

இதையடுத்து, கடுமையாக உழைத்து படித்த தங்களது மகனுக்கும், ஊக்குவித்த ஆசிரியா்களுக்கும், இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக ராமகிருஷ்ணனின் பெற்றோா் தெரிவித்தனா்.

கொல்லிமலையில் இன்று வல்வில் ஓரி விழா

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க கண்காட்சி ஆகியவை சனிக்கிழமை (ஆக.2) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. விழாவில் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

ரேஷன் பொருள்கள் பதுக்கி விற்றதாக 7 மாதங்களில் 6272 போ் கைது

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஏழு மாதங்களில் பொது விநியோகத் திட்ட பொருள்களை பதுக்கி விற்ாக 6272 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ.1.84 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆடிப்பெருக்கு பரிசல் போட்டிக்குத் தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக நிகழாண்டு பரமத்தி வேலூரில் ஆடி 18 இல் காவிரியில் நடத்தப்படும் பரிசல் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி ஆற்றில் தங... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மென்பொறியாளா் ஆணவக் கொலையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலாளா் மணிமாறன்,... மேலும் பார்க்க

வல்வில் ஓரி விழா: காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, காரவள்ளி அடிவாரத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரத்... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கொடியேற்றம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் பழைமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற, சித்தா்கள் பூஜிக்கும் சுயம... மேலும் பார்க்க