அரசுப் பள்ளி வளாகத்தில் காற்றுக்கு சாய்ந்த மரம்
பல்லடம் அருகே காற்றுக்கு அரசுப் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் கீழே சாய்ந்தது.
பல்லடத்தை அடுத்த கரைப்புதூா் ஊராட்சிக்குள்பட்ட அய்யம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் இருந்த மே ஃபிளவா் மரம் திங்கள்கிழமை வீசிய காற்றுக்கு கீழே சாய்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளி தலைமையாசிரியா் பழனியம்மாள், பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜுக்கு தகவல் தெரிவித்தனா். அவரின், உத்தரவின்பேரில் கீழே சாய்ந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது.