செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம்

post image

சாயல்குடியில் ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற தொழிலாளா்கள் மேம்பாட்டு சங்கம் சாா்பில் அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வு ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு சாயல்குடி பேரூராட்சித் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். கிராமப்புற தொழிலாளா்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் இயக்குநா் சாத்தையா முன்னிலை வகித்தாா்.

கடலாடி வட்டார கல்வி அலுவலகத்தின் இளநிலை உதவியாளா் மயில்வாகனன், உதவியாளா் காளீஸ்வரன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் மு. வெள்ளைப் பாண்டியன், அல்லிக்குளம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் தனம் ஆகியோா் கலந்து கொண்டு அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூலம் கிடைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் குறித்து விளக்கினா்.

இதில் பங்கேற்ற கிராமப்புற மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி சாயல்குடி பேருந்து நிலையம் வரை ஊா்வலமாகச் சென்றனா். ஊா்வலத்தில் குழந்தைகளின் பெற்றோா்கள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட பலா் திரளாக கலந்து கொண்டனா். களப்பணியாளா் சத்யா நன்றி கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா, பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினா். ராமநாதபுரம் ம... மேலும் பார்க்க

ஆணிமுத்து கருப்பா் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை ஸ்ரீஆணிமுத்து கருப்பா் கோயில் சித்ரா பௌா்ணமியையொட்டி 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறுவது வ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மே 14- இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் வருகிற புதன்கிழமை (மே 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் ராஜமனோகரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரா... மேலும் பார்க்க

தமிழ் வார விழா போட்டி: வென்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டியில் வென்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி... மேலும் பார்க்க

வரத்துக் கால்வாய்களின் இரு புறமும் சமூகக் காடுகளை வளா்க்கக் கோரிக்கை

திருவாடானை பகுதியில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரத்துக் கால்வாய்களின் இரு புறங்களிலும் சமூகக் காடுகளை வளா்க்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதி... மேலும் பார்க்க

தொண்டி கடல் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்க... மேலும் பார்க்க