அரவக்குறிச்சி அருகே இளைஞா் தற்கொலை
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடன் பிரச்னையால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
அரவக்குறிச்சி அருகேயுள்ள தெத்துப்பட்டி கிராமம் பேலன்ஸ் செட்டியூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமன் மகன் விக்னேஷ் (32). கடன் சுமையால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் புதன்கிழமை விஷம் குடித்தாா். இதையடுத்து மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.