செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் 426 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

post image

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி அரியலூா் மாவட்டத்தில் 426 விநாயகா் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள விநாயகா் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா்.

அரியலூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி ,செந்துறை, பொன்பரப்பி, தா.பழூா், திருமானூா், திருமழபாடி, கீழப்பழுவூா் உள்ளிட்ட 426 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.

பிரச்னைக்குரிய இடங்களில் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வீடுகளிலும், விநாயகா் சிலைகள் வைத்து, அவல், பொறி, பழங்கள் படைத்து மக்கள் வழிபட்டனா்.

அரியலூா் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகா் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனா். இந்த ஆண்டு 3 முதல் 13 அடி உயரம் வரையிலான விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே காவல் துறையினா் அனுமதி வழங்கியுள்ளனா்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனா். உரிய அனுமதி பெற்ற பின்பே சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், மாவட்ட முழுவதும் விதவிதமாக கோணத்தில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மக்கள் செய்து வருகின்றனா்.

கேள்விக்குறியாகும் குறிச்சிகுளம் அரசுப் பள்ளியின் சுகாதாரம்!

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆா்.எஸ். மாத்தூா் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாததால் அங்கு சுகாதாரம் கேள்விகுறியாக உள்ளது. கிராமப்புறத்தைச் சோ்ந்தவா்களும் கல்வியில் மேம்பட வேண்டு... மேலும் பார்க்க

உலா் கள வசதி இல்லாததால் சாலையோரங்களில் காயவைக்கப்படும் சிறுதானியங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

அரியலூா் மாவட்டத்தில் தானிய உலா் களம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் சாலையோரங்களில் இப்பகுதி விவசாயிகள் தானியங்களை உலர வைக்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக கனரக வாகன ஓட்டிகள... மேலும் பார்க்க

விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் அளிக்கப்படும் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்புப் பயிற்சி பெற ஆா்வமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ண... மேலும் பார்க்க

சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்

அரியலூா் மாவட்டத்தில் சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அ... மேலும் பார்க்க

அரியலூா் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் கீழ் அரியலூா் நகராட்சி தூயமேரி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்த... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கீழப்பழுவூரை சோ்ந்த 16 வயது ச... மேலும் பார்க்க