செய்திகள் :

சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.25 ஆயிரம் அபராதம்

post image

அரியலூா் மாவட்டத்தில் சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவா்கள் வாகனங்களை இயக்கினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் வாகன உரிமையாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் வதிக்கப்படும்.

வாகனத்தை இயக்கிய சிறுவா்களுக்கு அவா்களது 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநா் உரிமம் பெற தடை வதிக்கப்படும். இயக்கப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கோ, பெற்றோருக்கோ சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

எனவே அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவா்கள், இரு சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதை தவிா்க்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

உலா் கள வசதி இல்லாததால் சாலையோரங்களில் காயவைக்கப்படும் சிறுதானியங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

அரியலூா் மாவட்டத்தில் தானிய உலா் களம் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் சாலையோரங்களில் இப்பகுதி விவசாயிகள் தானியங்களை உலர வைக்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக கனரக வாகன ஓட்டிகள... மேலும் பார்க்க

விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் அளிக்கப்படும் விடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்புப் பயிற்சி பெற ஆா்வமுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ண... மேலும் பார்க்க

அரியலூா் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் கீழ் அரியலூா் நகராட்சி தூயமேரி தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்த... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கீழப்பழுவூரை சோ்ந்த 16 வயது ச... மேலும் பார்க்க

பெரியநாகலூா் ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்றி தூா்வாரக்கோரி மனு அளிப்பு

அரியலூா் அருகேயுள்ள பெரியநாகலூா் ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகாவிடம், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட 6 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞா் கொலை வழக்கில் தாய் உள்பட உறவினா்கள் 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். உடையாா்பாளையம் அடுத்த செட்டிகுழிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அரும்புராஜ்- சச... மேலும் பார்க்க